search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "REQUEST FOR SCHOLARSHIP"

    • உதவித்தொகை வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது
    • மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

    அரியலூர்

    கீழகுளத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கண்ணகி ஒரு மனு அளித்தார். அதில், எனது மகள் பரமேஸ்வரிக்கு கடந்த 25.8.2018-ந் ேததியன்று திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து திருமண உதவித்தொகை வேண்டி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தேன். ஆனால் இதுவரை, திருமண உதவித்தொகை கிடைக்கவில்லை. இது குறித்து கடந்த 2018-ம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறேன். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. ஆனால் என்னுடன் மனு அளித்தவர்களுக்கு திருமண உதவித்தொகை கிடைத்து விட்டது. எனவே எனது மகளுக்கான திருமண உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். மேலும் சிலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ×