search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Identity Card for Persons with Disabilities"

    • வருகிற 20-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் நடத்தப்படும் மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் வரும் 20-ந் தேதி முதல் ஒவ்வொரு பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் மாற்றுத்தி றனாளிகள் மாற்றுத்தி றனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய புதிய தேசிய அடையாள அட்டை வழங்க உள்ளன. இதற்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 4 புகைப்படத்துடனும்

    மேலும் அடையாள அட்டை புதுப்பிக்க ஏற்கெனவே பெறப்பட்ட தேசிய அடையாள அட்டையுடன் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இணையதள பதிவு முகாமில் மாற்றுத்திறனாளி நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் வழங்கினார்
    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தினை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதத்தின் முதல் வார செவ்வாய்கிழமை தோறும் மாவட்ட கலெக்டரின் தலைமையில் மாற் றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    நேற்று நடைபெற்ற இம்முகாமில் கலந்த கொண்ட 406 நபர்களில், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் 88 நபர்களுக்கும், காது கேளாதோர்க்கான 44 நபர்களுக்கும், கண் பாதிக்கப்பட்டவர் 32 நபர்களுக்கும்,

    மனவளர்சி குன்றிய 54 நபர்களுக்கும், மற்றும் 34 நபர்களுக்கும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுகள் கலெக்டர் தலைமையில் வழங்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 134 நபர்களுக்கும் முதமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 64 நபர்களுக்கு பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித்தொகை வேண்டி 45 நபர்களுக்கும், வங்கி கடன் 24 நபர்களுக்கும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 6 நபர்களுக்கும், சக்கர நாற்காலி வேண்டி 9 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    மேலும் 3 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், 2 நபர்களுக்கு -ரூ.18,000 மதிப்பில் சக்கர நாற்காலி 8 நபர்களுக்கு ரூ.-84.000 மதிப்பில் மற்றும் காதொலி கருவி, 2 நபர்களுக்கு ரூ.9,000 ஆக மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.1,11,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெற்று கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

    ×