search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 women arrest"

    ஆந்திராவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
    நகரி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தாடே பள்ளி என்ற ஊர் உள்ளது. இங்கு வீடுகளில் ஏராளமானோர் காசு வைத்து சீட்டாடுகிறார்கள். இந்த சூதாட்டம் பற்றி புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் வந்தது

    இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று தாடேபள்ளிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது டி.எஸ்.பி. ராமஆஞ்சநேயலு ஒரு வீட்டில் காசுவைத்து சூதாடிய 13 பேரை கைது செய்தார். இதில் 4 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    ×