search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 year old girl molested"

    சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    வேலூர்:

    ஆம்பூர் ஆலாங்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்த சாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 27). கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை சதீஷ்குமார் கடத்தி சென்று கற்பழித்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயிலில் இருந்து சதீஷ்குமாரை அழைத்து வரப்பட்டு, மகளிர் கோர்ட்டு நீதிபதி செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி பிரியா வாதாடினார்.

    குற்றம் நிரூபனமானதால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சதீஷ்குமாருக்கு 2 பிரிவுகளில் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    இதையடுத்து, சதீஷ்குமார் மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #Tamilnews
    ×