என் மலர்
நீங்கள் தேடியது "371 people have been arrested so far."
- சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி உள்ளது.
- ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஜூலை 17-ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டும், மேலும் கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடி யோ காட்சிகளை ஆதார மாகக் கொண்டும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீ சார் தொடர்ந்து கலவ ரத்தில் ஈடுபட்ட குற்றவாளி களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கனியா மூர் பள்ளி கலவரத்தில் பள்ளி சொத்துக் களை சேதப்படுத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சார்வாய்புதூர் கிரா மத்தைச் சேர்ந்த சக்தி வேல் என்பவரையும், போலீ சார் மீதும் போலீசார் வாகனத்தின் மீதும் கல்வீசி தாக்கிய வளையமாதேவி என்ற கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் , ஹரிஹரன் ஆகிய3பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கைது செய்து கள்ளக்குறிச்சி 2-வது குற்ற வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு ஆஜர்ப்படு த்தினர்.
தொடர்ந்து குற்றவாளி யை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். கனியாமூர் பள்ளி கலவர த்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மூலமாக இது வரை 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






