என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2 people suicide try"
சென்னை:
சென்னை மாங்காட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மாமியார் சாந்தி. இவர்களுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தி-சாந்தி மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் இருவரும் நேற்று நள்ளிரவு வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென்று 2 பேரும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் ஓடி சென்று இருவரையும் தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது.
பின்னர் 2 பேரையும் வேப்பேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாங்கள் அளித்த புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றோம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அடிக்கடி தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. பகல் நேரங்களில் தீக்குளிக்க முயலும் நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.
பகல் நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் அதிகம் ஈடுபடுகிறார்கள். இதனால் இதுபோன்ற சம்பவங்களை உடனே தடுக்கிறார்கள்.
நேற்று நள்ளிரவில் தீக்குளிப்பு முயற்சி சம்பவம் நடந்துள்ளதால் இரவு நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் மெத்தனமாக இருக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்