என் மலர்
நீங்கள் தேடியது "10 rupee note"
வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் பற்றி, ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு புகார் தெரிவிக்கலாம் என வங்கி மேலாளர் கூறியுள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி பரவி வருவதால் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர்.
மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட காலத்துக்கு புழக்கத்தில் இருக்கும்.
ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களில் இருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், அனைத்துமே சட்டப்படி செல்லுபடியாகும். இந்த நாணயங்கள் அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றவை.
இருப்பினும் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதால் சில இடங்களில் இந்த நாணயங்களைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணங்கள் செல்லாது என வதந்தி பரவி வருவதால் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் 10 ரூபாய் நாணயம் வைத்திருக்கும் பொதுமக்கள் படாத பாடுபடுகின்றனர்.
வேலூரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஆட்டோக்களில் 10 ரூபாய் நாணயம் வாங்குவதை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட வாங்க மறுப்பதாக குடிமகன்கள் கூறுகின்றனர்.
இது குறித்து முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன் கூறுகையில்:-
10 ரூபாய் நாணயம் செல்லும், பொதுமக்கள் வியாபாரிகள் எந்தவித பயமின்றி 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம்.
இது குறித்து வேலூர் மாவட்டத்தில் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது. வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் என யாரும் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்க வேண்டாம்.
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்திகளை புறக்கணித்து 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். புதிய மற்றும் பழைய 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் புழக்கத்தில் நீடிக்கும். இதனை தடையோ, ரத்தோ செய்யவில்லை.
பொதுமக்களும், வணிகர்களும் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு தடையேதும் கிடையாது. இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் பற்றி, ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு புகார் தெரிவிக்கலாம் என்றார்.
வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி பரவி வருவதால் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர்.
மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட காலத்துக்கு புழக்கத்தில் இருக்கும்.
ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களில் இருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், அனைத்துமே சட்டப்படி செல்லுபடியாகும். இந்த நாணயங்கள் அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றவை.
இருப்பினும் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதால் சில இடங்களில் இந்த நாணயங்களைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணங்கள் செல்லாது என வதந்தி பரவி வருவதால் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் 10 ரூபாய் நாணயம் வைத்திருக்கும் பொதுமக்கள் படாத பாடுபடுகின்றனர்.
வேலூரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஆட்டோக்களில் 10 ரூபாய் நாணயம் வாங்குவதை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட வாங்க மறுப்பதாக குடிமகன்கள் கூறுகின்றனர்.
இது குறித்து முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன் கூறுகையில்:-
10 ரூபாய் நாணயம் செல்லும், பொதுமக்கள் வியாபாரிகள் எந்தவித பயமின்றி 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம்.
இது குறித்து வேலூர் மாவட்டத்தில் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது. வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் என யாரும் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்க வேண்டாம்.
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்திகளை புறக்கணித்து 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். புதிய மற்றும் பழைய 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் புழக்கத்தில் நீடிக்கும். இதனை தடையோ, ரத்தோ செய்யவில்லை.
பொதுமக்களும், வணிகர்களும் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு தடையேதும் கிடையாது. இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் பற்றி, ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு புகார் தெரிவிக்கலாம் என்றார்.






