என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பீகார் மாநிலம்
நீங்கள் தேடியது "பீகார் மாநிலம்"
பீகார் மாநிலத்தில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இதுவரை ஒரு அடையாள அட்டையுடன் வாக்களித்த நிலையில் முதன்முறையாக இன்று இருவரும் தனித்தனியாக வாக்களித்தனர்.
பாட்னா:
பீகார் மாநில தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர்கள் சபா மற்றும் பரா. பிறவியிலேயே தலைப்பகுதியில் ஒட்டிப்பிறந்த இவர்களுக்கு உடலும், உள்ளமும், எண்ணங்களும் வெவ்வேறாக இருந்தாலும் தேர்தல் கமிஷன் இவர்கள் இருவரையும் ஒருவராகவே கருதி ஒரே ஒரு வாக்காளர் அடையாள அட்டையை மட்டும் வழங்கி இருந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இருவரும் நடந்துவந்து ஒரு வாக்கை செலுத்தி இருந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் தனித்தனியாக வாக்களர் அடையாள அட்டைகள் கிடைக்க பாட்னா நகர மாஜிஸ்திரேட் ஏற்பாடு செய்தார். இதைதொடர்ந்து தற்போது 23 வயதாகும் சபா மற்றும் பரா ஆகியோர் இரு அடையாள அட்டைகளுடன் இன்று தனித்தனியாக வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
ஒட்டிப் பிறந்த இவர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதற்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் உள்பட பலர் செய்த பெருமுயற்சிகள் பலனளிக்கவில்லை. இவர்களின் துயரநிலையை அறிந்த சுப்ரீம் கோர்ட் இருவருக்கும் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அளிக்குமாறு முன்னர் பீகார் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. தற்போது, அந்த தொகை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
இரட்டை சகோதரிகளான சபாவும் பராவும் இந்தி நடிகர் சல்மான் கானின் தீவிர ரசிகைகள். வேகமாக காரை ஓட்டி ஒருவர் மீது ஏற்றிக் கொன்ற வழக்கில் சல்மான் கான் முன்னர் கைதானபோது இவர்கள் இருவரும் சோகத்தில் ஆழ்ந்திருந்ததும், சல்மான் கான் சிறையில் இருந்து விடுதலையானபோது இவர்கள் நோன்பு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும் அப்போது ஊடகங்களில் வெளியானது.
இதைதொடர்ந்து சல்மான் இவர்கள் இருவரையும் தனது செலவில் மும்பைக்கு வரவழைத்து சந்தித்து, கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலம் ஷிவான் தொகுதியில் இரண்டு தாதாக்களின் மனைவிகள் தேர்தலில் போட்டியிடுவதையடுத்து, இருவரில் யார்? வெற்றிக்கனியை பறிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #LokSabhaElections2019 #SiwanConstituency
பாட்னா:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 5 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
பீகாரில் பா.ஜனதா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
இதே போல் காங்கிரஸ், லல்லுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம், ராஷ்டீரிய லோக் சமதா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
6-வது கட்ட தேர்தல் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. மொத்தம் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் பீகார் மாநிலத்தில் லால்மீகி நகர், ஷிவான், மகராஜ் கஞ்ச், கிழக்கு சம்பரன் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில் ஷிவான் தொகுதி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால் இத்தொகுதியில் இரண்டு தாதாக்களின் மனைவிகளான ஹினா ஷஹாப், கவிதாசிங் நேருக்கு நேர் களத்தில் மோதுகின்றனர்.
லல்லுவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி சார்பில் ஹினா ஷஹாப் போட்டியிடுகிறார். இவரது கணவர் முகமது ஷஹபுதீன் பிரபல தாதாவான இவர் அரசியலில் நுழைந்து ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் 4 முறை எம்.பி.யாகவும், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.
தற்போது அவர் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். முகமது ஷஹபுதீன் 2007-ம் ஆண்டு தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவரது மனைவி ஹினா ஷஹாப்புக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை லல்லு பிரசாத் வழங்கினார்.
ஆனால் அவர் 2009, 2014-ம் ஆண்டுகளில் தோல்வியை சந்தித்துள்ளார். தற்போது அவர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டியிடும் கவிதா சிங்கின் கணவர் அஜய்சிங்கும் பிரபல தாதா ஆவார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அஜய் சிங் தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
2 தாதாக்களின் மனைவிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஷிவான் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இருவரில் யார்? வெற்றிக்கனியை பறிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. #LokSabhaElections2019 #SiwanConstituency
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 5 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
பீகாரில் பா.ஜனதா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
இதே போல் காங்கிரஸ், லல்லுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம், ராஷ்டீரிய லோக் சமதா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
6-வது கட்ட தேர்தல் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. மொத்தம் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் பீகார் மாநிலத்தில் லால்மீகி நகர், ஷிவான், மகராஜ் கஞ்ச், கிழக்கு சம்பரன் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில் ஷிவான் தொகுதி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால் இத்தொகுதியில் இரண்டு தாதாக்களின் மனைவிகளான ஹினா ஷஹாப், கவிதாசிங் நேருக்கு நேர் களத்தில் மோதுகின்றனர்.
லல்லுவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி சார்பில் ஹினா ஷஹாப் போட்டியிடுகிறார். இவரது கணவர் முகமது ஷஹபுதீன் பிரபல தாதாவான இவர் அரசியலில் நுழைந்து ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் 4 முறை எம்.பி.யாகவும், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.
தற்போது அவர் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். முகமது ஷஹபுதீன் 2007-ம் ஆண்டு தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவரது மனைவி ஹினா ஷஹாப்புக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை லல்லு பிரசாத் வழங்கினார்.
ஆனால் அவர் 2009, 2014-ம் ஆண்டுகளில் தோல்வியை சந்தித்துள்ளார். தற்போது அவர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டியிடும் கவிதா சிங்கின் கணவர் அஜய்சிங்கும் பிரபல தாதா ஆவார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அஜய் சிங் தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
2 தாதாக்களின் மனைவிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஷிவான் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இருவரில் யார்? வெற்றிக்கனியை பறிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. #LokSabhaElections2019 #SiwanConstituency
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X