என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் 2 தாதாக்களின் மனைவிகள் தேர்தலில் போட்டி
Byமாலை மலர்10 May 2019 8:54 AM GMT (Updated: 10 May 2019 9:50 AM GMT)
பீகார் மாநிலம் ஷிவான் தொகுதியில் இரண்டு தாதாக்களின் மனைவிகள் தேர்தலில் போட்டியிடுவதையடுத்து, இருவரில் யார்? வெற்றிக்கனியை பறிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #LokSabhaElections2019 #SiwanConstituency
பாட்னா:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 5 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
பீகாரில் பா.ஜனதா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
இதே போல் காங்கிரஸ், லல்லுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம், ராஷ்டீரிய லோக் சமதா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
6-வது கட்ட தேர்தல் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. மொத்தம் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் பீகார் மாநிலத்தில் லால்மீகி நகர், ஷிவான், மகராஜ் கஞ்ச், கிழக்கு சம்பரன் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில் ஷிவான் தொகுதி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால் இத்தொகுதியில் இரண்டு தாதாக்களின் மனைவிகளான ஹினா ஷஹாப், கவிதாசிங் நேருக்கு நேர் களத்தில் மோதுகின்றனர்.
லல்லுவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி சார்பில் ஹினா ஷஹாப் போட்டியிடுகிறார். இவரது கணவர் முகமது ஷஹபுதீன் பிரபல தாதாவான இவர் அரசியலில் நுழைந்து ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் 4 முறை எம்.பி.யாகவும், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.
தற்போது அவர் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். முகமது ஷஹபுதீன் 2007-ம் ஆண்டு தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவரது மனைவி ஹினா ஷஹாப்புக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை லல்லு பிரசாத் வழங்கினார்.
ஆனால் அவர் 2009, 2014-ம் ஆண்டுகளில் தோல்வியை சந்தித்துள்ளார். தற்போது அவர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டியிடும் கவிதா சிங்கின் கணவர் அஜய்சிங்கும் பிரபல தாதா ஆவார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அஜய் சிங் தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
2 தாதாக்களின் மனைவிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஷிவான் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இருவரில் யார்? வெற்றிக்கனியை பறிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. #LokSabhaElections2019 #SiwanConstituency
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 5 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
பீகாரில் பா.ஜனதா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
இதே போல் காங்கிரஸ், லல்லுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம், ராஷ்டீரிய லோக் சமதா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
6-வது கட்ட தேர்தல் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. மொத்தம் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் பீகார் மாநிலத்தில் லால்மீகி நகர், ஷிவான், மகராஜ் கஞ்ச், கிழக்கு சம்பரன் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில் ஷிவான் தொகுதி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால் இத்தொகுதியில் இரண்டு தாதாக்களின் மனைவிகளான ஹினா ஷஹாப், கவிதாசிங் நேருக்கு நேர் களத்தில் மோதுகின்றனர்.
லல்லுவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி சார்பில் ஹினா ஷஹாப் போட்டியிடுகிறார். இவரது கணவர் முகமது ஷஹபுதீன் பிரபல தாதாவான இவர் அரசியலில் நுழைந்து ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் 4 முறை எம்.பி.யாகவும், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.
தற்போது அவர் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். முகமது ஷஹபுதீன் 2007-ம் ஆண்டு தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவரது மனைவி ஹினா ஷஹாப்புக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை லல்லு பிரசாத் வழங்கினார்.
ஆனால் அவர் 2009, 2014-ம் ஆண்டுகளில் தோல்வியை சந்தித்துள்ளார். தற்போது அவர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டியிடும் கவிதா சிங்கின் கணவர் அஜய்சிங்கும் பிரபல தாதா ஆவார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அஜய் சிங் தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
2 தாதாக்களின் மனைவிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஷிவான் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இருவரில் யார்? வெற்றிக்கனியை பறிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. #LokSabhaElections2019 #SiwanConstituency
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X