என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தவார சமையல் டிப்ஸ்"

    • வாழைப்பூ வடை செய்யும்போது சிறிது பச்சரிசி மாவு சேர்த்தால் வடை உடையாமல் வரும்.
    • புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் சுவை கூடும்.

    தோசை மாவு அரைக்கும் போது, வேக வைத்த சாதத்தையும் சேர்த்து அரைத்தால் தோசை மென்மையாக இருக்கும்.

    தோல் சீவிய இஞ்சை இடித்து தயிரில் சேர்த்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்.

    வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது புளித்த மோர் சேர்த்தால் பொரியல் மொறுமொறுவென்று இருக்கும்.

    கேரட், பீட்ரூட் அல்வா செய்யும்போது சிறிது பால் பவுடர் சேர்த்து கிளறினால் அல்வாவின் ருசி கூடுதலாகும்.

    வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும் போது வெந்தயத்தை சேர்த்தால் நெய் வாசனை கமகமவென்று இருக்கும்.

    வாழைப்பூ வடை செய்யும்போது சிறிது பச்சரிசி மாவு சேர்த்தால் வடை உடையாமல் வரும்.

    புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் சுவை கூடும்.

    ரசம் தாளிக்க எண்ணெய்க்கு பதில் நெய் ஊற்றி தாளித்தால் ரசம் வாசனையாக இருக்கும்.

    கீரையை சமைத்து இறக்கிய பின்னர் உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களை தடுக்கலாம்.

    சாம்பாரில் புளிப்பு அதிகமாகி விட்டால் ஒரு துண்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கலாம்.

    பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் பூரி சீக்கிரம் நமத்து போகாமல் இருக்கும்.

    சாலட் தயாரிக்க தக்காளி நறுக்கும் போது சாறு வெளியேவராமல் இருக்க, தக்காளியின் அடிப்பகுதியில் பிளஸ் போன்று கீறி பின்னர் வட்டமாக நறுக்கலாம்.

    ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை இல்லை என்றால் சிறிதளவு முருங்கையிலை சேர்த்து இறக்கினால் தனி சுவை தரும்.

    சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் கொள்ளுப்பருப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் உடம்பில் கொழுப்பு சேராமல் இருக்கும்.

    • எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.
    • பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

    • தயிர் பச்சடியில் பாலாடையை போட்டால் எளிதில் புளித்து விடாமல் இருக்கும்.

    • டீயில் சிறிதளவு சுக்குத்தூள், மிளகுத்தூள், ஏலக்காய் தூள் கலந்தால் அதிக ருசி கிடைக்கும். அஜீரணக் கோளாறும் சீராகும்.

    • முட்டையை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

    • வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரையை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.

    • சமையலுக்கு பட்டாணி பயன்படுத்தும்போது அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.

    • நறுக்கிய வெங்காயத்துடன் சிறிது வெண்ணெய் சேர்த்து வைத்தால் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும்.

    • எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.

    • பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

    • கோதுமை மாவு தோசைக்கு காலையிலேயே மாவை கரைத்து வைத்தால் மாலையில் சுடும் போது ஒட்டாமல் வரும்.

    • சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, பெருங்காயம், வெந்தயம், சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையோடு மட்டுமின்றி நீண்ட நேரம் கெடாமலும் இருக்கும்.

    • சுண்டல், வெள்ளை சுண்டல், ராஜ்மா, காராமணி போன்ற பருப்பு வகைகளை கிரேவியாக சமைக்கும் பொழுது, வெந்த பருப்பில் இருந்து சிறிதளவு எடுத்து அரைத்து கரைத்து விட்டால் கிரேவி கெட்டியாக இருப்பதுடன் ருசியும் கூடும்.

    • காய்ந்த ரொட்டியை துண்டுகளாக நறுக்கி நன்றாக காய வைத்து எடுத்து வைத்தால் அவற்றை புலாவ், பிரியாணி ஆகியவற்றில் வறுத்துப் போட சுவையாக இருக்கும்.

    • கத்திரிக்காய் காம்புகளை கழுவிக்கொண்டு ரசம் அல்லது சாம்பார் கொதிக்கும்போது போட்டால் சுவையாக இருக்கும்.

    • முருங்கைக்கீரை உருவிய காம்புகளை சுத்தம் செய்து ரசத்தில் போட்டு குடித்தால் மூட்டுகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.

    • கத்திரிக்காயை நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் கறுத்துப் போகாமல் இருக்கும்.

    • வாழைப்பூ, வாழைக்காய் போன்ற காய்கறிகளை நறுக்கும் பொழுது ஏற்படும் கறையைப் போக்க, கைகளை வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் தேய்த்து விட்டு சோப்பு போட்டு கழுவினால் கை பளிச்சென்று ஆகிவிடும்.

    • கசக்கும் காய்களை அரிசி கழுவிய நீரில் சில நிமிடம் போட்டு சமைத்தால் கசப்பு குறையும்.

    • சில முள்ளங்கிகள் அதிக வாடை வீசும். அவற்றை அரை மணி நேரம் முன்பாக தண்ணீரில் ஊறவைத்து பிறகு சமைத்தால் வாசனை வராது.

    • குளிர் காலத்தில் லேசான சுடு பாலில் உறை ஊற்றி வைத்தால் சீக்கிரம் கெட்டித்தயிர் கிடைக்கும்.

    • பன்னீரை, வினிகர் தெளித்த பாலீத்தின் பையில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    • சேமியா உப்புமா செய்யும் போது பாதி அளவு நீரும், பாதி தேங்காய் பாலும் கலந்து செய்தால் உப்புமா ருசிக்கும்.

    • வெண்ணெய் காய்ச்சிய வாணலியில் உருளைக்கிழங்கு அல்லது அவரைக்காயை வதக்கி வறுவல் செய்தால் சுவையும், மணமும் கூடுதலாக இருக்கும்.

    • பச்சடி, சூப் செய்ய சிவப்பு நிற வெங்காயத்தை பயன்படுத்துவது நல்லது. இது ருசியைக் கூட்டும்.

    • முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.
    • பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.

    * வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு போன்றவற்றில் காரம் அதிகமாகி விட்டால், சிறிது தேங்காய் பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதோடு சுவையாகவும் இருக்கும்.

    * சாம்பாருக்கு போடும் துவரம் பருப்பை லேசாக வறுத்து வேக வைத்தால் சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாது.

    * கேரட்டை நீரில் போட்டு வேக வைப்பதை விட இட்லி போல் ஆவியில் வேக வைத்தால் கேரட்டில் உள்ள சத்துக்கள் அழியாமல் இருக்கும்.

    * அவல் கேசரி செய்யும்போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு வாசனை வரும் வரை லேசாக வறுத்து, பின்பு மிக்சியில் லேசாக அரைத்து கேசரி செய்தால் ரவா கேசரி போல் இருக்கும்.

    * அடைக்கு ஊற வைக்கும்போது அரிசி, பருப்பு வகைகளுடன், ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயமும் ஊற வைத்து அரைத்தால் அடை மிருதுவாகவும், வாசனையாகவும் இருக்கும்.

    * ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்து பாருங்கள். தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென நன்றாக இருக்கும்.

    * சர்க்கரை பொங்கல் செய்யும் போது பாலுக்கு பதில் பால் பவுடர் சேர்த்து செய்தால் பொங்கலின் சுவை கூடும்.

    * எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்து பருப்பு ரசம் செய்யலாம். சுவையாக இருக்கும்.

    * காய்கறிகள், கீரை போன்றவற்றை வேக வைத்த நீரைக் கீழே கொட்டாமல் ரசத்தில் சேர்த்தால் சத்து மிகுந்த ரசம் தயார்.

    * சூப் செய்ய நல்ல கிரேவி பதம் வருவதற்கு சோள மாவு கிடைக்காத பட்சத்தில் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து சேர்த்தால் அடர்த்தியாக இருக்கும். சத்தும் அதிகம்.

    * பீட்ரூட்டைத்துருவி ஆவியில் வேக வைத்து, கெட்டியான தயிரில் போடவும். மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து பீட்ரூட் கலவையில் கலந்தால் சுவை மிகுந்த பீட்ரூட் பச்சடி தயார்.

    * நீர் மோரில் சிறிது ரசப்பொடி சேர்த்து பருகினால் சுவையாக இருக்கும்.

    * நீள மிளகாயை கிள்ளி, பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துக்கொண்டால், தாளிக்கும் போதும், மற்ற உபயோகத்துக்கும் சுலபமாக இருக்கும்.

    * இஞ்சியை துருவி, வெயிலில் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டால், டீ, குருமா, பொங்கல் போன்றவற்றில் சேர்க்க மணத்துக்கு மணம், உடலுக்கும் நல்லது.

    * சப்பாத்தியின் மேல் சிறிது எண்ணெய்யைத் தடவி ஒரு டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.

    * ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த்துருவல் மற்றும் வாழைப்பழத்தைச் சேர்த்து அரைத்து வைத்து ஆப்பம் வார்த்தால் ஆப்பம் சுவை மிகுந்து இருக்கும்.

    * மாங்காய்த்தொக்கு, இஞ்சித் தொக்கு என்று எதை செய்தாலும் அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தால் அந்த தொக்குகள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

    * முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.

    * பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.

    * இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஊற வைத்த அரிசியையும், உளுந்தையும் முப்பது நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்திருந்து அரைத்தால் மிக்சி சூடாவதை தவிர்க்கலாம்.

    • முளைக்கீரை வேகும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.
    • மோர் ஊற்றி வெண்டைக்காயை வதக்கினால் வழவழப்பு தன்மை போய்விடும்.

    * அரிசி ஊற வைப்பது போல பருப்பையும் ஊற வைத்து சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும்.

    * தேங்காய் பர்பி செய்யும் போது தேங்காயுடன் கேரட்டையும் துருவி சேர்த்து செய்தால் பர்பி கலர்புல்லாக இருக்கும்.

    * ஏலக்காயை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், ஏலக்காய் எளிதில் தூளாகி விடும்.

    * பஜ்ஜி மாவுடன் ஓமம் சேர்த்து செய்தால் பஜ்ஜி நல்ல மணத்துடன் இருக்கும்.

    * கேசரி செய்யும் போது தண்ணீரின் அளவைக் குறைத்து, பால் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

    * முளைக்கீரை வேகும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * மோர் ஊற்றி வெண்டைக்காயை வதக்கினால் வழவழப்பு தன்மை போய்விடும்.

    * மீதமுள்ள காய்கறி பொரியல்களை தோசை மாவுடன் கலந்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு அடை மாதிரி ஊற்றலாம்.

    * பிரெட்டை வெட்டும் பொழுது கத்தியை வெந்நீரில் நனைத்து வெட்டவும்.

    * பூண்டு வாங்கியவுடன் உதிர்த்து வைத்தால் வீணாகாமல் இருக்கும்.

    • பச்சை மிளகாயை நறுக்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவிக்கொண்டால் எரிச்சல் ஏற்படாது.
    • கேரட் அல்வா செய்யும் போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால் கோவா சேர்த்தால் பிரமாதமான சுவை கிடைக்கும்.

    * கீரைக்கூட்டுக்கு தேங்காய் அரைத்து செய்வதற்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தால் ருசி கூடும்.

    * பருப்பு அடைக்கு தேங்காய் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கை சேர்த்து அடை சுட்டால் மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * தேங்காய் பர்பி செய்யும் போது 2 டீஸ்பூன் ராகி மால்ட் சேர்த்தால் சுவை கூடும்.



    * தேங்காயை உடைத்து முதலில் கண் உள்ள பாகத்தை உபயோகிக்க வேண்டும், அந்தப் பகுதி தான் விரைவில் கெட்டுப்போகும்.

    * பச்சை மிளகாயை நறுக்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவிக்கொண்டால் எரிச்சல் ஏற்படாது.

    * கோதுமை அல்வா செய்யும் போது நீர்த்து விட்டால் சிறிதளவு சோள மாவை கரைத்துச் சேர்க்கலாம். அல்வா கெட்டிப்படுவதுடன் சுவையும் அதிகரிக்கும்.

    * பாகற்காய் குழம்பு செய்யும் போது நான்கு துண்டுகள் மாங்காய் சேர்த்தால் கசப்பு தெரியாது.

    * கேரட் அல்வா செய்யும் போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால் கோவா சேர்த்தால் பிரமாதமான சுவை கிடைக்கும்.

    * எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு டீஸ்பூன் அவலை பொடி செய்து சூப்பில் சேர்த்துக் கொதிக்க விட்டால் சூப் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * வற்றல் குழம்பு செய்யும் போது கடைசியாக வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டால் குழம்பு ஜோராக இருக்கும்.

    * தயிர் வடை செய்ய உளுந்துடன் ஐந்தாறு முந்திரிப் பருப்புகளையும் ஊற வைத்து அரைத்தால் வடைகள் மெத்தென்று இருப்பதுடன் ருசியும் அருமையாக இருக்கும்.

    • சப்பாத்தி மீதமானால் ஈரத்துணி சுற்றி வைத்தால் பதமாக இருக்கும்.
    • ஒரு கப் அவல், ஒரு கைப்பிடி பச்சரிசி, உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து செட் தோசை செய்யலாம்.

    * இட்லிப்பொடி தயாரிக்கும்போது சிறிது கறிவேப்பில்லையை வறுத்து அரைத்து சேர்த்தால் மணமாகவும், பித்தத்தை போக்கவும் உதவும்.

    * பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி மென்மையாக மாறும்.

    * சப்பாத்தி மீதமானால் ஈரத்துணி சுற்றி வைத்தால் பதமாக இருக்கும்.

    * தோசைமாவு குறைவாக இருந்தால், அந்த அளவிற்கு அரிசி மாவு, தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நீர் விட்டு சிறிது நேரம் கழித்து ஆப்பம் ஊற்றலாம்.

    * ஒரு கப் அவல், ஒரு கைப்பிடி பச்சரிசி, உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து செட் தோசை செய்யலாம்.

    * இட்லி மாவு அரைக்கும்போது சிறிது ஐஸ்வாட்டர் ஊற்ற இட்லி பஞ்சு போல் மிருதுவாக வரும்.

    * பீர்க்கங்காயுடன் தக்காளி, வரமிளகாய், வெங்காயம், வதக்கி சட்னி செய்தால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.

    * மீதமான அப்பளம் இருந்தால், அத்துடன் தேங்காய், கருவேப்பிலை, புளி, உப்பு, பச்சை மிளகாய் வறுத்து சேர்த்து அரைக்க அப்பள துவையல் ரெடி. மாறுபட்ட சுவையை கொண்டிருக்கும்.

    • சாம்பார், அவியல், மசியல் செய்யும்போது இஞ்சி சேர்த்தால் வாய்வு சேராது.
    • இஞ்சி, தேங்காய், கருவேப்பிலை கலந்து துவையல் செய்தால் அருமை.

    1. அடை மாவு, தோசை மாவு புளித்து விட்டால், இரண்டு டம்ளர் வெந்நீர் விடவும். பத்து நிமிடம் கழித்து தெளிந்த நீரை கொட்டி விட்டால் புளிப்பு குறைந்து விடும். பின்பு ஒரு பிடி ரவை அல்லது அரிசி மாவு கலந்தால் சரியாகிவிடும்.

    2. பாசிப் பயறு சுண்டல் செய்வதற்கு, முதல் நாள் இரவு தண்ணீரில் பாசி பயறை ஊற வைக்கவும். அடுத்த நாள் தண்ணீரை வடிகட்டி விட்டு துணியில் கட்டி வைத்தால் முளைகட்டி விடும். இதை சுண்டல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடலுக்கு கூடுதல் சத்தும் கிடைக்கும்.

    3. சாம்பார், அவியல், மசியல் செய்யும்போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்தால் வாய்வு சேராது.

    4. ஓட்ஸ் உடன் ஒரு பிடி அவல், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.

    5. கத்தரிக்காய், பூசணி போன்ற புளிக்கூட்டு செய்யும்போது கடலைப் பருப்பை கொஞ்சம் குறைத்து விட்டு, மீல்மேக்கர் சேர்த்து செய்தால் சுவை கூடும்.

    6. தேங்காய் துவையல் அரைக்கும் போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

    7.பாகற்காய், குடை மிளகாய் போன்றவற்றை சிறியதாக நறுக்கி உப்பு, எலுமிச்சம் பழம் சேர்த்தால் ஊறுகாய் ரெடி.

    8. தேங்காய் துருவல், பொட்டுக் கடலை, வெல்லம் போன்றவற்றை ஒன்றாக கலந்து மாலையில் நொறுக்குத்தீனியாக சாப்பிடலாம்.

    9. கோவைக்காய், மிளகாய் இவற்றை மிகச் சிறியதாக நறுக்கி பொரியல் செய்தால் சாப்பிட நன்றாக இருக்கும்.

    10. இஞ்சி, தேங்காய், கருவேப்பிலை கலந்து துவையல் செய்தால் சுவையோ சுவை.

    • ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.
    • தோசை மாவு, பொங்கல் தயாரிக்கும்போது சிறிது சீரகத்தை கைகளால் தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும்.

    * வெங்காய பக்கோடா செய்வதற்கு மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையை தூளாக்கி அதனை மாவுடன் சேர்க்கவும். அப்படி செய்தால் பக்கோடா மொறு மொறுவென்றும், ருசியாகவும் இருக்கும்.

    * சப்பாத்தியை சுட்டெடுத்ததும் எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் சப்பாத்தியின் அடியில் வியர்த்து ஈரமாவது தடுக்கப்படும்.

    * தேங்காய்த் துருவல் மீதமானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும். அதனை மறுநாள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாடிப்போகாது.

    * கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்பு பலகாரங்களை நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.

    * ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.

    * தோசை மாவு, பொங்கல் தயாரிக்கும்போது சிறிது சீரகத்தை கைகளால் தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும்.

    * சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக்கிளறி இறக்கினால் பொங்கல் சுவையாக இருக்கும்.

    * பாயசத்திற்கு உலர் திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை சிறிதாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

    • அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.
    • டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.

    * ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறு வென்றிருக்கும்.

    * ஜாங்கிரி செய்யும்போது, பத்து ஜாங்கிரியை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே தயிர் ஊற்றி, கொஞ்சம் உப்பு போட்டு ஊறவைத்துச் சாப்பிட்டுப் பாருங்களேன். சூப்பர் ருசி!

    * தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.

    * மாதுளம்பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து பூ வெந்ததும் எடுத்துவிட்டு ஆறியதும் பாலில் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். இதுபோல தொடர்ந்து எட்டு நாட்களுக்கு அருந்தினால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

    * பருப்பு ரசம் நுரையுடன் பொங்கிவரும் போது கொத்தமல்லித்தழையை உடனே போடாமல் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, ஐந்து நிமிடம் தாமதித்து ரசத்தில் கிள்ளிப்போட்டால் மல்லி அதன் பசுமை மாறாமல் ரசம் கமகமவென்று வாசனையுடன் இருக்கும்.

    * சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த பெருங்காய நீரை உபயோகித்தால் மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.

    * அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.

    * டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.

    * ஒரு கப் நல்லெண்ணெய்யை சூடாக்கி, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம், இரண்டு வெற்றிலை, சிறிய வில்லை அளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து, மறுபடியும் சூடு செய்து வைக்கவும். மறுநாள் இந்த எண்ணெய்யை தலைக்குதேய்த்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு குளித்தால் ஜலதோஷம் பிடிக்காது, புத்துணர்வும் கிடைக்கும்.

    * வெண்ணெய் பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வைத்தால், வெண்ணெய் கையிலோ, பேப்பரிலோ ஒட்டாமல் வரும். மேலும் வெண்ணெய் காய்ச்சி இறக்கியதும் அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வைத்தால், நெய் வாசனையாக இருக்கும்.

    * இட்லிக்கு அரிசி ஊற வைக்கும்போது அரிசியோடு ஐந்தோ, ஆறோ சோயா பீன்ஸை ஊற வைத்து அரைத்தால் இட்லி மல்லிப்பூப் போல் மிருதுவாக இருக்கும்.

    * காய்கறி, பருப்பு, ரசம் இவற்றிற்கு அளவாக நீரைச்சேர்த்து கொதிக்கவிடவும். வெந்தபிறகு நீரை வடித்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகி விடும். அப்படி நீரை வடித்தால் அந்த வடிநீரை குழம்பு, கூட்டு இவற்றில் சேர்த்து விடவும்.

    * பால் லேசாகத்திரிந்து விட்டால், அதில் சிறிது சமையல்சோடா சேர்த்து கலந்து உறை ஊற்றவும். கெட்டித்தயிராகி விடும்.

    * குளிர்காலத்தில் தயிர் எளிதில் உறையாது. பாலை ஒரு ஹாட்பாக்ஸில் ஊற்றி, உறை ஊற்றி மூடி வைத்து விட்டால் மூன்று மணி நேரத்தில் உறைந்து விடும்.

    * பொரித்தெடுத்த ஜாமூனை சூடான சர்க்கரைப்பாகில் போட்டு ஊறவைக்காமல் நன்கு ஆறிய சர்க்கரைப்பாகில் சேர்த்தால் ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்கும்.

    * தேன்குழல், சீடை ஆகியவற்றைச்செய்யும் போது மாவை வெந்நீர் ஊற்றிப்பிசைந்தால் எத்தனை நாளானாலும் நமத்துப் போகாது.

    * வெள்ளரிக்காய் சூப் தயாரிக்கும்போது வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துச்சேர்த்தால் நன்றாக இருக்கும்.

    * வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களில் மில்க் ஷேக் செய்யும்போது கொஞ்சம் வெண்ணெய் போட்டு செய்தால் மில்க் ஷேக் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும்.

    ×