என் மலர்tooltip icon

    வழிபாடு

    2026 பங்குனி மாத ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
    X

    2026 பங்குனி மாத ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

    • செல்வாக்கை விரும்பும் மேஷ ராசியினரே உங்களின் ராசி அதிபதி செவ்வாய் பங்குனி 19 வரை 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
    • ஆடம்பரத்தை விரும்பும் ரிஷப ராசியினரே மாத துவக்கத்தில் உச்சம் பெற்ற உங்களின் ராசி அதிபதி சுக்கிரன் பங்குனி 11 முதல் 12ம்மிடமான விரய ஸ்தானம் செல்கிறார்.

    செல்வாக்கை விரும்பும் மேஷ ராசியினரே

    உங்களின் ராசி அதிபதி செவ்வாய் பங்குனி 19 வரை 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். அதன் பிறகு 12ம்மிடமான விரய ஸ்தானம் செல்வார். உங்களின் திட்டமிடுதல் மற்றும் செயல்படும் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் நல்ல சாதனை படைக்கலாம். இது சுப விரயமா? அல்லது அசுப விரயமா? என்பது உங்களுடைய சுயசாதக ரீதியான தசா புத்தியே முடிவு செய்யும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் முதலீடுகளை அதிகரிக்க முடியும்.

    சேமிப்பு, சிக்கனத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதம். சிலருக்கு தனிமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். மனம் எளிமையை விரும்பும். உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஓடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனதடுமாற்றம் ஏற்படும். யாரை நம்புவது எந்த காரியத்தை செய்வது எதில் லாபம் வரும் என்ற நிதானமற்ற நிலை நீடிக்கும். சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். அதனால் மனச் சோர்வு மிகும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். கடந்த வந்த நாட்களில் நடந்த எதிர்மறையான சம்பவங்களை மனிதில் இருந்து விலக்க வேண்டும். நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். தூக்கம் குறையும். பயணங்களால் சில அசௌகரியங்கள் உண்டாகும்.

    ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டும். கண், கை கால் மூட்டு வலி போன்றவற்றிற்கு சிகிச்சை செய்ய வேண்டிய நேரம் உள்ளது. வரவிற்கு ஏற்ற செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்ய அதிக சிரமத்தை சந்திப்பார்கள். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு போதிய நீராதாரம் இன்மையால் அவஸ்த்தையாக இருக்கும். விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காது. அரசின் உதவிகள் காலதாமதமாக வந்து சேரும். குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டக் குறைவு, மெத்தனப் போக்கும் நிலவும். சோம்பலும் மறதியும் மிகுதியாகும். சொந்த வீடு, வாகனம் வாங்க விரும்புபவர்கள் சுய ஜாதகத்தை பரிசோதித்து சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடவும்.

    ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் மேஷ ராசியினர் வாழ்வில் செட்டில் ஆகுவதற்கும் நல் வழி கிடைக்கும். ஜனன கால ஜாதக ரீதியான பல்வேறு தோஷங்களால் திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல வரன் வரும். திருமணத் தடை அகலும். முதல் திருமணத்தில் மன நிம்மதி இழந்து அல்லாடுபவர்கள் தற்போது முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும். சுய ஜாதகத்தில் 7,8ம் பாவகங்களில் பிரச்சனை இருந்து திருமணத் தடை இருந்தால் அதற்கு உரிய பரிகார வழிபாட்டு முறையை கடைப்பிடித்து திருமணத்தை நடத்த வேண்டும். ஆண், பெண் ஜாதகத்தில் இருக்கும் குறைகளை நிறைவு செய்யும் விதமான

    குருமங்கள யோகம்

    ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு விதமான யோகங்களில் குருமங்கள யோகம் சிறப்பான யோகமாகும். ராசி அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வை மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் மேல் பதிகிறது இது குரு மங்கள யோகமாகும். தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும் அற்புதமான மாதம். புகழ் ,அந்தஸ்து கெளரவம் அதிகரிக்கும். நம்பிக்கை, நாணயம் உயரும். குடும்ப நலனுக்காக ஆன்மீக யாத்திரை சென்று வர திட்ட மிடுவீர்கள். சிலருக்கு அரசிடமிருந்து இலவச வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம் வரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.சில சமூக ஆர்வளர்களுக்கு அரச கௌரவம் கிடைக்கும்.வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். விவசாய நிலத்திற்கு புதிய ஒப்பந்ததாரர், குத்தகைதாரர்கள் கிடைப்பார்கள்.

    பொருளாதாரம்

    மாத துவக்கத்தில் தன ஸ்தான அதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்தில் நிற்கும் வரை பொருளாதாரம் மந்த நிலை நிலவும். விரய ஸ்தானம் பலம் பெறுவதால் பண மோசடி மிகுதியாக இருக்கும். இரண்டாம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். நெருங்கிய உறவினர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுத்தால் திரும்ப வராது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மன சங்கடம் அதிகமாகும் ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

    முதலீட்டாளர்கள்

    உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும்.ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒருவரின் வேலையில் மற்றவர் குறுக்கிடாமல் இருந்தால் தப்பித்து விடுவீர்கள். தொழில் கூட்டாளிகள், பங்குதாரர்கள் தங்களின் வரைமுறைக்கு உட்பட்ட பணிகளை மட்டும் செய்து அடுத்தவர் விசயத்தில் தலை இடாமல் இருந்தால் எந்த வம்பு தும்பும் இல்லாமல் காலத்தை கடத்தலாம். திரைத்துறையினர் மிகப் பெரிய முதலீட்டில் புதிய படம் எடுப்பது நல்லதல்ல. கலைத்துறையினருக்கு வரும் வாய்ப்பு திடீரென கை நழுவிப் போகும்.

    உத்தியோகஸ்தர்கள்

    உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறிய பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கண் துடைப்பிற்கான பதவி உயர்வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும் உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. சிலர் பணிச்சுமை காரணமாக விருப்ப ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. சிலருக்கு கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். சிலருக்கு மனதிற்கு பிடிக்காத உத்தியோக இடமாற்றம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வேலையை தக்க வைக்க முடியும்.

    அரசியல்வாதிகள்

    பதவி ஸ்தான அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில மறைவதால் அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் உங்களை வந்து பார் என்று வம்புக்கு இழுக்கும். பிறரை பற்றிய விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது.எனினும் சுய ஜாதகர் ரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் எதிர்பாராத சம்பவங்களையும் திருப்பங்களையும் நடத்துவார் என்பதால் மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். பெரிய பதவிகளும் உங்களுக்கு கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது.

    பெண்கள்

    உங்களின் திறமையும் பேச்சு சாதுர்யமும் பல இடங்களில் கை கொடுக்காது.எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற உணர்வு வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தலை தூக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு குற்றச்சாட்டுகள் மன வேதனையை தரும்.மறைமுக எதிர்ப்புகளும், சூழ்ச்சிகளும் போட்டிகளும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் நயவஞ்சக செயலால் சமுதாயத்தின் மேல் வெறுப்பு ஏற்படும். சற்று அலைச்சல் மிகுந்த பணியாக இருக்கும். சரியான நேரத்திற்கு ஓய்வு எடுக்க முடியாது. நேரத்திற்கு உண்ண முடியாமல் காலம் தாழ்த்தி கிடைத்த உணவை உண்டு காலம் கடத்த நேரும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் பகைவர்களிடம் கூட அன்பாக பேசி காரியத்தை சாதிக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டால் வீட்டு விஷயம் வெளியே வராமல் காக்கப்படும்.

    கவனம் தேவை

    செவ்வாய் சனி சேர்க்கை - 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் உள்ள சனியுடன் ராசி அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். விரய ஸ்தானத்தில் சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுவதால் அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீண் அலைச்சலை ஏற்படுத்தும் பயணங்கள் செய்ய நேரும். உங்கள் முன்னோர்களின் பரம்பரை நோயான சுகர், பிரஷர், பிபி உங்களை தாக்க தயாராகும் காலம். இதிலிருந்து தப்பிக்க முறையான உடற்பயிற்சி அவசியம். இல்லையேல் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய வியாதி தாக்கும். அதுமட்டுமல்லாமல் சரியான மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்வது நலம்.வெகு சிலருக்கு காதில் சீழ் வடிதல், காது வலி போன்ற காது தொடர்பான பிரச்சனையால் தலை வலி வரும். 2, 4 சக்கர வாகனங்களில் செல்லும் போது உரிய ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும். இரண்டு சக்ர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்ல கூடாது. நான்கு சக்ர வாகனங்களை இயக்குபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது. ஜாதகத்தை பொருத்த வேண்டும்.

    பரிகாரம்

    தொழில் தடை, கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, பெளர்ணமி தோறும் சத்திய நாராயணர் பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.

    ஆடம்பரத்தை விரும்பும் ரிஷப ராசியினரே

    மாத துவக்கத்தில் உச்சம் பெற்ற உங்களின் ராசி அதிபதி சுக்கிரன் பங்குனி 11 முதல் 12ம்மிடமான விரய ஸ்தானம் செல்கிறார். ராசி அதிபதி விரய ஸ்தானம் சென்றாலும் லாப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சனி புதன் சேர்க்கை ஏற்படுவதால் பல்வேறு விதமான சுப பலன்களும் நடக்கும் எண்ணங்களும் லட்சியங்களும் கனவுகளும் ஈடேறும். புகழ் அந்தஸ்து கீர்த்தி உயரும். கெளரவத் தோற்றம் ஏற்படும். தெய்வ நம்பிக்கை கூடும்.

    திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். இது திறமையை மெருகேற்றி கொள்ள உகந்த அமைப்பாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தாய் வழி குடும்ப விசேஷங்களில் நடைபெறும் உறவுகளின் சந்திப்பு இன்பங்களை மலரச் செய்யும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள்.அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து பொலிவு பெறச் செய்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும். இளைய சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். வேலையாட்களிடம் நிலவி வந்த குழப்பம் மறையும்.

    மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். கடவுளே இல்லை என்று கூறியவர்கள் கூட ப்ரபஞ்ச சக்தியை உணர்வார்கள் தடைபட்ட வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வருவதில் சற்று கால தாமதம் எற்படும். பொருளாதார நிலையில் சிறு ஏற்றத்தாழ்வு இருக்கும். கடன் சுமை குறையும். நோய் நொடி நீங்கும். வம்பு வழக்குகள் எதிர்பாராத வெற்றியைத் பெற்றுத் தரும் அல்லது அல்லது தள்ளிப்போகும். பணம் தொடர்பான வழக்குகள் இருந்தால் தள்ளுபடியாகும்.

    ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தால் இப்பொழுது ஆரோக்கியம் ஏற்படும். யோகா மெடிடேசன், பிராணயாமம் கை கொடுக்கும். இயற்கை வைத்தியம் நல்ல பலன் தரும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதம் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். மனைவி மூலம் பொருள் வரவு எற்படும். திடீர் அதிர்ஷ்டம், புதையல் லாட்டரி, உயில் மூலம் எதிர்பாராத வகையில் பண வரவு வரும். இளம் காதலர்களுக்கு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் நடக்கும்.

    இரண்டாம் திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தை வழி சுற்றத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். இரவு நேரத்தில் வாகனத்தில் பிரயாணம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலர் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து புதிய கவலைகளை உருவாக்குவார்கள். யாருக்கேனும் நன்மை செய்தால் அது உங்களுக்கு தீமையாகவே வந்து முடியும். உறவினர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டு அவமானத்தை தேடிக் கொள்வீர்கள்.

    குருமங்கள யோகம்

    ரிஷப ராசிக்கு 7,12ம் அதிபதியான செவ்வாயின் நான்காம் பார்வை ராசிக்கு 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் 8.11ம் அதிபதி குருவின் மேல் பதிகிறது. இது குருமங்கள யோகமாகும்.ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.தொட்டது துலங்கும். ராஜயோக அதிர்ஷ்டத்தை கொடுக்கும் மாதம் என்றால் அது மிகையாகாது.முக்கியமான செயல்களைத் தெளிவாக செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும்.குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறித சிறிதாக அடைக்க முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். பெரும் விரயம் ஏற்படாது.

    வீடு, வாகனம் தொடர்பான உங்களின் கனவுகள் பலிதமாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வார்கள்.வங்கிகள் , நிதி நிறுவனங்களின் உதவியுடன் வீடு, மனை, நிலம் வாங்குதல் சுலபமாக நடைபெறும். ஒரு சிலர் பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். சுமாரான வீட்டில் குடி இருந்தவர்கள் சூப்பர் வீட்டிற்கு செல்வார்கள். தாயின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிக செலவு செய்ய நேரும். அண்ணன், தம்பிகளிடம் யார் அம்மாவை பராமரிப்பது என்ற கருத்து வேறுபாடுமிகும்.

    பொருளாதாரம்

    பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும் . இனிமேல்வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும். என்றாலும் வீண் செலவுகளை குறைத்து உங்கள் வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதானமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியம் உண்டாகும். வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகை கிடைக்கும். பழைய சேமிப்புகள், இன்சூரன்ஸ் பாலிசிகள் முடிவடைந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும் .குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும்.சுப நிகழ்வுகள் நடைபெறும்.

    முதலீட்டாளர்கள்

    சொந்த தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் மிகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மிகும். தொழில் ரீதியான மிகப் பெரிய வளர்ச்சியை பார்ப்பீர்கள். மிகக் குறுகிய காலத்தில் தொழிலுக்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைக்கும். உங்கள் திறமைகள் அனைவராலும் போற்றப்படும். சிலருக்கு மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். எப்படி பணம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணவரவு இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிப்பால் கெளரவம் அந்தஸ்து அதிகரிக்கும். உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு மிகைப்படுத்தலான நன்மைகள் உண்டு.தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் சட்டத்தின் பிடியில் சிக்க நேரும்.

    உத்தியோகஸ்தர்கள்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாகும். நிம்மதியான மனநிலையில் பணிபுரிவீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். சம்பள உயர்வு பதவி உயர்வு என வாழ்வாதாரம் உயரும். வாங்கிய கடனை அடைப்பீர்கள்.பிறர் விஷயங்களில் தலையிடாமல் கொடுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும்.அதிக வெளியூர் பயணம் செல்ல நேரும். பணிபுரியும் இடத்தில் உள்ள விதிகளை மீறாமல் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோக ரீதியான இடமாற்றம் சற்று ஆறுதலாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்து சேரும். வெளிநாட்டு வேலை அரசு வேலை முயற்சி வெற்றி தரும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். நினைத்த இடமாற்றம் கிடைப்பது உறுதி. அடிக்கடி பிராயணம் செய்ய வேண்டிய சூழல் நிலவும்.

    அரசியல்வாதிகள்

    இது வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த யோகமாகும். சொல்வாக்கு செல்வாக்கு ஓங்கும். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களது சமூக அந்தஸ்து உயரும் நீங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தால் உங்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். தலைமையிடம்,கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பொது மக்களின் ஆதரவும் உண்டு. நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் உங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். பொது நிகழ்ச்சியில் மிகுந்த எச்சரிக்கையாக பேச வேண்டும். எதிர் கட்சியினர் உங்கள் வார்த்தையை கொண்டே உங்கள் கட்சியில் கலகத்தை ஏற்படுத்துவார்கள்.

    பெண்கள்

    பெண்களுக்கு அதிக நன்மைகள் நடக்கும்.விதவிதமான நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். புகுந்த வீட்டில் உங்களின் பேச்சுக்கு தனி மதிப்பும் மரியாதையும் ஏற்படும். அந்தஸ்து கெளரவம் உயரும் . தாய் வழிச் சீதனம் கிடைக்கும்.அடகு வைத்த நகைகள் மீண்டு வரும்.புதிய ஆடம்பர ஆடைகள் நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். பொருள் பற்றாக்குறை அகலும்.குடும்பத்தில் அமையும் நிம்மதியும் நிலவும்.பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் கூடும்.

    கவனம் தேவை

    செவ்வாய் சனி சேர்க்கை 11ம்மிடமான விரய ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 7,12ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்கள் .ஞாபக மறுதி , மனக்குழப்பம் அதிகரிக்கும். தந்தை, தந்தை வழி உறவினர்கள் வெளி பேச்சில் நல்ல வராகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்து பேசுவார்கள். பூர்வீக சொத்து இன்று வந்து விடும் நாளை வந்து விடும் என இலவு காத்த கிளியாக நாளை கடத்த வேண்டும்.மதுப்பழக்கம் இருப்பவர்கள் மனக்குழப்பத்தால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற நேரும். எனவே போதை பழக்கத்தை கைவிட்டு அம்மன் வழிபாடு செய்ய மாற்றங்கள் தேடி வரும். உங்களின் செயல்களில் சுயநலப் போக்கு உருவாகும். குழப்பமான மனநிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். ஞாபக மறதி உண்டாகும். பய உணர்வு அதிகரிக்கும்.எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிக்கலாம். காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.புதிய வேற்று மத நண்பர்கள் நண்பிகள் கிடைப்பார்கள்.

    பரிகாரம்

    நெய், பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்த பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க, தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.

    விவேகமான மிதுன ராசியினரே

    பங்குனி மாத துவக்கத்தில் வக்ரகதியில் இருக்கும் உங்கள் ராசி அதிபதி புதன் பங்குனி 6 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். மாத இறுதியில் பங்குனி 27ல் மீன ராசியில் நீசம் அடைகிறார். பல்வேறு சோதனைகள் சாதனையாகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும். தைரியம் ,தெம்பு உருவாகும். அழியாத புகழ் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும், ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

    சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிறும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். இதுவரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிந்தனை செயல் திறன் கூடும். முகப் பொலிவு ஏற்படும். தன வரவு இரட்டிப்பாகும்.

    சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும். இதுவரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடிபுகும் ஆர்வம் மிகும். உங்கள் எண்ணம் போல் வீடு, வாகன யோகம் அமையும். சிலர் வீட்டை புதுப்பித்து நவீனமயமாக்குவர்கள். 2 சக்கர வாகனம் வைத்து இருப்பவர்கள் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். தாயருக்கு சிறு, சிறு உடல் நலக் குறைவு ஏற்படலாம். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆறுதலும் கிடைக்கப் பெறும். தாய் வழி உறவினர் மூலம் தன வரவு வரும். தாய் வழி குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும்.

    குடும்பத்துடன் சென்று குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். குல தெய்வ,இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மன அமைதி அடைவீர்கள். மனம் தனிமையை நாடும். பாவம் எது? புண்ணியம் எது?வாழ்நாளில் மனிதன் எப்படி வாழ வேண்டும் போன்ற சிந்தனைகள் தோன்றும்.

    மோட்சம் அடையும் மார்க்கத்தில் ஈடுபடும் ஆர்வம் மிகும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு. திருமண வயதில் இருக்கும் உங்களின் மகள், மகனின் திருமணத்தை சீரோடும் சிறப்போடும் நடத்துவீர்கள். பல வருடங்களாக தடைபட்ட எண்ணற்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். உங்களின் காதல் விசயம் பெற்றோருக்கு தெரிய வரும். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு காதல் திருமணம் நடைபெறும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும். புத்திர பிரார்த்தம் உண்டாகும்.

    குருமங்கள யோகம்

    ராசியில் சஞ்சரிக்கும் 7,10 ம் அதிபதி குருவை 6,11ம் அதிபதி செவ்வாய் நான்காம் பார்வையால் பார்க்கிறார் இது குருமங்கள யோகமாக பலன் தரும். தான தர்மங்களில் நாட்டம் மிகும். ஆசை, பேராசை, எதார்த்தம் இந்த மூன்றில் எது நிராந்தரமாக மனிதனை வழி நடத்தும் என்ற உண்மை புரியும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எனினும் தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும். சொத்து அடமானத்தின் பெயரில் கடன் பெரும் எண்ணம் தோன்றும். யாருக்கேனும் ஜாமீன் போட்டு வம்பு வழக்கில் சிக்கி கொள்ள கூடாது. விற்கப்பட வேண்டிய சொத்தாக இருந்தால் நல்ல விலைக்கு விற்க முடியும். பூர்வீகம் சென்று உற்றார், உறவினரை கண்டு மகிழ்வீர்கள். வேகம் கலந்த விவேகத்துடன் செயல்பட்டு சந்தோஷ மழையில் நனையப் போகிறீர்கள். பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், பெரிய மனி தர்களின் நட்பு கிடைக்கும். தேங்கி கிடந்த பழைய பணிகள் மளமளவென முடியும். சமுதாயத்தில் நல்ல மதிப்பும் கௌரவமும் கிடைக்கும்.

    பொருளாதாரம்

    புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வாழ்க்கை வளமாகும். கட்ட முடியாத வீட்டை கட்ட முடியும். விற்க முடியாத சொத்தை விற்க முடியும். தொழில், வியாபார அபிவிருத்தி, பண வரவு என அனுகூலமான பலன்களை பெறுவார்கள். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். விட்டதை பிடிக்கும் நேரம் என்று கூட கூறலாம். கடன்கள் நிவர்த்தியாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ முடியும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் எதிர்பாராத உதவிகளும் உங்களை மகிழ்விக்கும் காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்த தகுந்த வைத்திய உதவிகள் கிடைக்கும்.

    முதலீட்டாளர்கள்

    புதிய தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். உங்களுக்கு தெரிந்த நன்கு பரிட்சயமான தொழிலே சிறக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். எல்லாத் துறையை சேர்ந்தவர்களுக்கும் லாபம் அடைய வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்று கருத்து மறையும். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். அரசின் சலுகைகள், மானியங்கள் எளிதில் கிடைக்கும். அல்லது சம்பளம் வாங்காமல் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ப வர்களுக்கு பாதிப்பு இல்லை. தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களும் முறையாக வைத்து இருக்க வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாத தொழில் உங்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும்.சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும்.

    உத்தியோகஸ்தர்கள்

    வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும் அல்லது பணி நிமித்தமாக நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் வெளிநாடு சென்று வருவீர்கள். ஒரு சிலருக்கு தலைமை பொறுப்பு கிடைக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் காப்பாற்றுவீர்கள். எப்போது விடிவு காலம் வரும் என்று காத்து இருந்த உங்களுக்கு விடிவு காலம் வந்து விட்டது. சுயதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்பு உருவாகும். தொழில் நிலவி வந்த மந்த நிலை மாறும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். பலருக்கு சொந்த ஊருக்கு பணி மாற்றம் கிடைக்கும்.

    பெண்கள்

    முன்னேற்றமான காலம். ஆளுமைத் திறன் மேம்படும். வீடு, மனை என சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல் என உங்கள் சிந்தனை எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். எதிர்பார்த்த அனைத்து வழிகளிலும் வரவுகள் இருக்கும். சுய தொழிலில் நிலவிய சங்கடங்கள், குறுக்கீடுகள் விலகும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.அலுவலகத்தில் உங்கள் மீது ஏற்பட்ட வீண் பழி விலகும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சுப நிகழ்வுகள் மங்களகரமாக நடக்கும். நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி ஊடல் கூடலாக மாறும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். உடல் நிலை தேறும்.

    கவனம் தேவை

    செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 6,11ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். அடமான பொருட்களை மீட்க தேவையான பணம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் நிலவிய மன அழுத்தம் குறையும். நவீன கரமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். உயர் கல்வியால் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் தீர்க்க உகந்த மாதமாகும். வீண் அலைச்சலும் காரியத்தடையும் வரலாம். உயில் எழுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும். சொத்துக்களின் விற்பனை சாதகமாகும். பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.தாய், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அரசின் சட்ட திட்டங்களில் முறையாக கடைபிடிக்க வேண்டும் பணம் கொடுக்கல் வாங்கலுக்கு முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். எதிலும் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது முக்கியமாகும்.

    பரிகாரம்

    மன சஞ்சலத்திலிருந்து விடுபட விநாயகரை தினமும் 21 முறை வலம் வர வேண்டும்.

    கனிவான கடக ராசியினரே

    கடக ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் சனி, செவ்வாய் புதன் சேர்க்கை ஏற்பட போகிறது. எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள்.எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பொறுப்புடன் செயல்படுவீர்கள் உங்கள் செயலிலும் பேச்சிலும் அறிவு மேம்படும்.இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். வீடு, வாகன யோகம் உள்ளது. அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.மனம் மகிழும் சம்பவம் நடைபெறும்.

    தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.உடன் பிறந்தவர்களுடன் தாய் வழிச் சொத்து விஷயத்தில் நிலவிய சலசலப்பு மாறும். புத்திர பிராப்தம் உண்டாகும். அதிர்ஷ்டம் சார்ந்த ஆதாயம் உண்டாகும். கடந்த கால கடன்கள், பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். உயர்கல்வி முயற்சி சாதக மாகும். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும்.

    புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம் அல்ல.உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடை வீர்கள். திருமணத்தடைத் அகலும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை நிறைவேற்றுதல் போன்ற சுப செலவு உண்டாகும்.தடைபட்ட குலதெய்வ நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று மகிழ்வீர்கள்.

    உங்களின் குல தெய்வமும், இஷ்ட தெய்வமும் உங்கள் வீட்டில் குடியிருந்து அருளாசி வழங்கும்.உடன் பிறந்தவர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். தந்தையால் ஆதாயம் உண்டு. பூர்வ புண்ணியம் வினைப் படி நீங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களையும் நியாயமானதாக இருந்தால் நடந்து விடும். இள வயது கடக ராசியினருக்கு தாய், தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். வயதானவர்களுக்கு தாத்தா பாட்டி என்ற பதவி உயர்வு கிடைக்கும். ஒரு சிலர் குழந்தை பிறப்பிற்கான மருத்துவம் எடுப்பார்கள்.பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு பணவரவு, அதிர்ஷ்டம் நிறைய கிடைக்கும். அதிக பணத்தை பார்த்தவுடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பணம் ஸ்வாகா தான்.பொருளாதார இழப்பு தொடர்பான வம்பு வழக்கு உண்டாகும்.

    குருமங்கள யோகம்

    ராசிக்கு 12ம்மிடமான மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானை 5,10ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். கடக ராசிக்கு 6, 9 ஆம் அதிபதியான குரு பகவானை செவ்வாய் பார்ப்பது நன்மையும் தீமையையும் கலந்த பலனை வழங்கும்.முன் யோசனையுடன் முறையான திட்டமிடுதல் உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். இது வரை எதிரி, போட்டி என்றால் என்னவென்றே தெரியாது இருந்த உங்களுக்கு நண்பர்களே எதிரி என்ற உண்மை புரியும். சுய தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு இடைஞ்சல்களை சந்தித்து கொண்டே இருப்பீர்கள். எனினும் ஆன்மீக சிந்தனை, இறை நம்பிக்கையால் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றியை நோக்கி செல்வீர்கள்.கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த விசுவாசமான வேலையாட்கள் ஒதுங்குவார்கள். வேலைக்கு முயற்சி செய்பவர்கள் குடும்ப சூழல் காரணமாக படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு செல்வார்கள். வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் உயர் அதிகாரிகள் பணிச்சுமையை அதிகரித்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவார்கள்.

    பொருளாதாரம்

    அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் மாதம். தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். நவீனமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் ஏற்படும்.சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.

    முதலீட்டாளர்கள்

    சொந்த தொழில் செய்பவர்களுக்கு, தொழில் அதிபர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். தடைகள் விலகுவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.தொழிலால் கவுரவம், அந்தஸ்து. கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். அதிருப்தி மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் கூட்டாளிகளும் தொழில் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். பல புதிய தொழில் முதலீட்டாளர்கள் உருவாகுவார்கள். முன்னோர்களின் பரம்பரை தொழிலை நடத்துபவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி உண்டு. தொழிலை விரிவு படுத்த தேவையான நிதி உதவி கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

    உத்தியோகஸ்தர்கள்

    இதுவரை உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். அரசு, தனியார் ஊழியர்கள் வசதி குறைவான ஊருக்கு மாற்றம் செய்யப்படுவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் பணியின் தன்மை, ஊதியம், பணி நியமன ஆணை, பணிக் கான ஒப்பந்தம் போன்றவற்றை சரி பார்த்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம்.அரசின் சட்ட திட்டங்களில் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    அரசியல்வாதிகள்

    அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த மாதம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும். கட்சி மாறும் எண்ணத்தை கைவிட வேண்டும். முழு நேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்தி அதிக செலவு செய்து சமூக தொண்டாற்றி மக்கள் மனதில் இடம் பிடிக்க உழைக்க வேண்டும். கட்சிக்காகவும், மக்களுக்காவும்தொண்டர்களுக்காகவும் உழைக்க வேண்டும். தான் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற கர்வத்துடன் செயல்படக் கூடாது. பொது நிகழ்ச்சியில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    பெண்கள்

    நியாயமான ஆசைகள் நிறைவேறும் காலம்.திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். பேச்சை தொழிலாக கொண்டவர்கள் மேன்மை அடைவார்கள். தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். வெளிநாடு செல்ல தடையாக இருந்த விசா பிரச்சனை சீராகும்.தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். ஆசைகளால் மனம் அலைபாயும். விரயங்களும் ஏற்படும். எனவே கவனத்துடன் செயல்பட்டு வெற்றியைக் காணுங்கள்.

    கவனம் தேவை

    செவ்வாய் சனி சேர்க்கை கடக ராசிக்கு 7,8ம் அதிபதியான சனி பகவானும் 5,10ம் அதிபதியான செவ்வாயும் பங்குனி 19 (2.4.2026) அன்று பாக்கிய ஸ்தானத்தில் இணைகிறார்கள்.ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.வேலை பார்க்கும் நிறுவனத்தில் சில அசெளகரியங்கள் நடந்தாலும் முதலாளிக்காக நன்றியுடன் வேலை செய்வீர்கள். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மூத்த சகோதர, சகோதரி சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும்.சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். பலவீன மனத்தினர் சிலர் மாந்தரீகம், அருள் வாக்கு கூறும் இடம் என அலைந்து மன நிம்மதிக்கான மார்க்கத்தை தேடுவார்கள்.

    பரிகாரம்

    வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட இனம் புரியாத அனைத்து பிரச்சனைகளிடம் இருந்து விடுபடுவீர்கள்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    Next Story
    ×