திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்

சந்திரசேகரர் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அண்ணாமலையார் கிரிவலத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசத்துடன் வழிபட்டனர்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று முன்தினம் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தீப தரிசன நாளில் அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், மாலையில் அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று இரவு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

சந்திரசேகரர் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அதிகாலை உண்ணாமலை சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்றார்.

பவுர்ணமி தினத்தில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தது கூடுதல் சிறப்பாகும். அண்ணாமலையார் கிரிவலத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசத்துடன் வழிபட்டனர்.

கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு என அண்ணாமலையார் ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வருவது வழக்கமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com