என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- தேவேந்திரன் இந்திராணியுடன் பிரம்மஹத்தியை விட்டு இவ்விடத்தில் நீங்கியபடியால், இது சுரேந்திர மோட்சம் என்று மூவுலகத்திலும் கூறப்படும்.
- பிரம்மனின் தண்டம் புடார்ஜினமாகிய இங்கு, தண்டாதரனாக இருப்பதால் இந்த தலம் தண்டாசி என்றும் கூறப்படுகிறது.
அகத்திய மாமுனி இந்த முக்கிய தீர்த்தங்களில் எல்லாம் சாஸ்திர முறைப்படி நீராடி வழிபட்டு தட்சிணை அளித்து புடார்சுனே சனையும், கோமதி அம்பாளையும் வலம் வந்து வணங்கி, மந்திரங்களையும், தந்திரங்களையும் கொண்டு தூபம், தீபம், சந்தம், புஷ்பம், அட்சதை, நைவேத்யம் முதலானவைகளால் சிவனை பூஜித்து, பூஜை முடிவுபெற பின் வருமாறு தோத்திரம் செய்தார்.
'ஓம் சகல பிராணிகளையும் சிருஷ்டித்து பாலனம் செய்து, சம்ஹாரம் செய்கின்ற திருமூர்த்தியும், சகல பதார்த்தங்களுக்கும் காரணரூபியும், விருட்சத்தின் பொந்தில் வாசம் செய்பவனுமாக இருக்கும் உனக்கு வணக்கம்.
ஸ்ரீஹரியின் கண்களால் அர்ச்சனை செய்யப் பெற்றவனும், காளகூட விஷத்தை பானம் செய்தவனும், பக்தர்களின் மேன்மைக்காக ஆசை கொண்டவனுமாக இருக்கின்ற புடார்சுனனை அடியேன் உபாசனை செய்கிறேன்.
பரிமளம் பூசியவனும், அழகு பொருந்தியவனும், சந்திர பிரபை சூடியவனும், வீரானந்தரசம் என்று பெயர் பெற்றவனுமாகிய புடார்சுனனை உபாசனை செய்கிறேன்.
கங்கையைத் தரித்தவனும், பிறை சூடியவனும், அர்த்த நாரீச ரூபம் கொண்டவனும், வாசுதேவனுக்கு நேசனும், சாந்தனுமாக விளங்கும் புடார்சுனரை வணங்குகிறேன்.
யமனுக்கு யமனாகவும், கலைகளுக்கு ஆதாரமாகவம், பக்தர்களுக்கு பீதியை போக்குபவனும், பார்வதியுடன் மங்கள ரூபியாக இருக்கும் புடார்சுனரை உபாசனை செய்கிறேன்.
சூரியன், சந்திரனை கண்களாகப் பெற்றவனும், விஷ்ணு ரூபியும், கோடி சூரியனின் ஒளியைத் தாங்கியவனுமான புடார்சுனரை உபாசிக்கிறேன்.
சங்கு, குருக்கு முல்லை, சந்திரன் இவை போல் வெளுத்தவனும், கற்பூரம் போல் பரிசுத்த சரீரம் கொண்டவனும், கருணா ரூபிணியுமான புடார்சுன தேவனை உபாசிக்கிறேன்." என்று துதித்து பக்தி ததும்பிய மனதுடன் அகத்திய மாமுனி தண்டம் போல சன்னிதானத்தில் விழுந்து வணங்கினார்.
அப்போது அர்த்த நாரீசராக பரமசிவன் லிங்கத்தில் இருந்து தோன்றி, திருக்கைகளால் வெகுமானித்து பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளினார்.
"ஓ... முனியே, கவுதம முனியையும், ஏகத முனியையும் சமாதானம் செய்து நாம் உத்திரவு கொடுத்தபடி, மலைய பர்வதத்தில் குப்தி சிருங்கம் செல்ல வேண்டும்."
என்று கூறி அந்த லிங்கத்தில் மறைந்த உடன் கும்பமாமுனி ஆச்சரியம் கொண்டு ஹயக்ரீவன் மற்ற முனிவர்களுடன் பிரம்மானந்தத்தை உணர்ந்தார்.
தேவேந்திரன் இந்திராணியுடன் பிரம்மஹத்தியை விட்டு இவ்விடத்தில் நீங்கியபடியால், இது சுரேந்திர மோட்சம் என்று மூவுலகத்திலும் கூறப்படும்.
பிரம்மனின் தண்டம் புடார்ஜினமாகிய இங்கு, தண்டாதரனாக இருப்பதால் இந்த தலம் தண்டாசி என்றும் கூறப்படுகிறது.
- வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறிட சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யலாம்.
- அம்பாளுக்கு புடவை சாத்தி திருக்கல்யாணம், வளையல்கள் போட்டு, தொட்டில் கட்டி வளைகாப்பு மற்றும் படிபாயாசம் படைத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றலாம்.
1. திருப்புடைமருதூர் ஆலயம் கட்டப்பட்டு 1200 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
2. இந்த தலத்து விநாயகர் பெயர் அனுக்கை விநாயகர். இங்கு நைவேத்தியமாக சுத்தன்னம் படைத்து வழிபடுகின்றனர்.
3. வட இந்தியாவில் வாரணாசியை காசியாக புகழ்வது போல் தென் இந்தியாவின் காசியாக திருப்புடைமருதூர் புகழப்படுகிறது.
4. சிவாலயங்களில் பொதுவாக ஈசனின் இடது பக்கம் அம்பாளின் சன்னதி அமைந்திருக்கும். இந்த தலத்தில் ஈசனுக்கு வலது பக்கத்தில் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது.
5. இந்த ஆலயம் உருவாக மூலக்காரணமாக அமைந்த பிரம்மதண்டம் ஆலயத்தின் முக்கிய பகுதியான கருவறை அருகே இடது பக்கத்தில் இருப்பதை காணலாம்.
6. கருவறையை சுற்றி ராமேஸ்வரம் லிங்கம், காசி லிங்கம் என்ற பெயர்களில் சிறிய லிங்கங்கள் உள்ளன.
7. திருப்புடைமருதூர் ஆலயத்தின் வடக்குப் பகுதியில் தாமிரபரணி நதி ஓடுகிறது. மற்ற இடங்களில் வேகமாக ஓடும் தாமிரபரணி ஆற்று தண்ணீர், இந்த தலம் அருகே நிதானமான வேகத்துடன் மெல்ல ஓடுகிறது. எனவே இங்கு ஆனந்த குளியல் போடலாம்.
8. நடராஜர் ஆடும் கோலத்தில் தனி சன்னதியில் உள்ளார். இவர் புனுகு வாசனைத் திரவியத்தால் உருவாக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
9. திருப்புடைமருதூர் ஆலயம் அருகில் அத்தாளநல்லூர் ஆதிமூலம் கஜேந்திரவரதர் ஆலயம் மற்றும் வீரவநல்லூர் பூமிநாதர் ஆலயங்கள் உள்ளன. உங்கள் பக்தி யாத்திரையை திட்டமிட்டு அமைத்துக் கொண்டால் இந்த ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்ய முடியும்.
10. இந்த தலத்து மூலவரை நாறும்பூநாதர் என்று அழைப்பது போல உற்சவரை பூநாதர் என்று அழைக்கிறார்கள்.
11. தைப்பூசம் 10 நாட்கள், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் ஆகியவை இந்த தலத்து முக்கிய திருவிழாக்களாகும்.
12. திருமணத்தடை, புத்திரதோஷம், தீராத பிணிகள், குடும்ப கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கிடவும், குடும்ப ஐஸ்வர்யம் பெறவும், கல்வி, கேள்விகளில் சிறக்கவும், வியாபாரம் விருத்தி அடையவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம்.
13. வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறிட சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யலாம்.
14. அம்பாளுக்கு புடவை சாத்தி திருக்கல்யாணம், வளையல்கள் போட்டு, தொட்டில் கட்டி வளைகாப்பு மற்றும் படிபாயாசம் படைத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றலாம்.
15. இறைவன் கொடும் பாவங்கள் செய்தவர்களையும் பக்தி தந்து ஆட்கொள்ளும் செய்திகள் திருப்புடைமருதூர் புராணம் நூலில் உள்ளன.
16. இறைவனைப் 'போற்றி' சொல்லித் துதிப்பதற்கான பாடல்கள் இந்நூலில் பல உள்ளன. அவற்றைத் தொகுத்து அன்பர்கள் பாராயணம் செய்து பல்வகை நலன்களையும் பெறலாம்.
17. இந்த ஆலயத்தின் கோபுர உட்புறச் சுவர்களில் தீட்டப்பட்ட பழம்பெரும் வண்ண ஓவியங்களும், அங்குள்ள மரச் சிற்பங்களும், கற்சிற்பங்களும் சிறந்த கலைப் படைப்புகளாக திகழ்கின்றன.
18. பழம் பெரும் சிவத்தலமான திருப்புடைமருதூர் திருத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் மிக்க பெருமை கொண்டது.
19. இத்தலத்தின் பெருமைகளை விளக்கும் நூல்கள் பல உள்ளன. திருப்புடை மருதூர்ப் பதிற்றுபத்து அந்தாதி, திருப்புடை மருதூர் இரட்டை மணிமாலை, திருப்புடை மருதூர் மும்மணிக் கோவை, திருப்புடைமருதூர்ப் பள்ளு என்பன அவை.
20. சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதியாக இருந்த ரத்தின வேல் பாண்டியன் திருப்புடை மருதூரில் பிறந்தவர். இத்தலத்து இறைவன் பால் ஈர்ப்பு உள்ளவர். திருப்புடை மருதூருக்கும், திருக்கோவிலுக்கும் எண்ணற்ற சேவை செய்துள்ளார்.
- அதற்கு தென்பக்கத்தில் பரஞ்ஜோதியாக மகாபாவங்களைத் தொலைக்கும் தண்டபாவம் என்று பெயர் பெற்ற புண்ணிய தீர்த்தம் ஒன்று உள்ளது.
- அதில் நீராடி வழிபடுவோர் சகல விருப்பங்களையும் இவ்வுலகில் அனுபவித்து முடிவில் முக்தியைப் பெறுகின்றனர்.
சிறப்பு மிக்க இந்த தலத்தின் அருகே மிக அதிகமான தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.
அதாவது அருகில் உள்ள ஊர்க்காட்டில் இருந்து திருப்புடைமருதூர் வரை 10 முக்கிய தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.
அனைத்துமே சிறப்பு மிக்கவை ஊர்க்காட்டில் உள்ள சக்கர தீர்த்தம், அத்தாளநல்லூரில் உள்ள கஜேந்திர வரதர் படித்துறைக்கு தென்புறம் உள்ள விஷ்ணு தீர்த்தம், அதன் வடபகுதியில் உள்ள அகத்தியர் தீர்த்தம், மற்றும் அதனருகே உள்ள சிங்கதீர்த்தம், திருப்புடைமருதூர் அருகே கடனா நதி சேரும் இடத்தில் கடனா சங்கம தீர்த்தம், கோவில் பின்புறம் படித்துறையில் தெற்கு ஓரமுள்ள பைசாச மோனசோ தீர்த்தம், சுரேந்திர மோட்ச தீர்த்தம், படித்துறையின் வடக்கு பகுதியில் கருமதீர்த்தம், அதற்கு எதிர்புறம் தண்ட பிரம்மச்சாரி தீர்த்தம், நதி கிழக்காக திரும்பும் இடத்தில் மனசா தீர்த்தம் ஆகியவை இன்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் தீர்த்தங்களாக இங்கு விளங்குகிறது.
திருப்புடைமருதூரில் லிங்கத்திற்கு தென்பாகம் கவுதம தீர்த்தம் என்ற திருநாமம் பெற்ற தீர்த்தம் ஒன்று உள்ளது.
அந்த கவுதம தீர்த்தத்திற்கு கடவுளின் ஆணைப்படி அநேக தீர்த்தங்கள் வந்துள்ளன.
அவ்விதமாக தீர்த்தத்தில் கும்ப முனியான அகத்தியர் மற்றய முனி கணங்களுடன், லோபா முத்ரா தேவி சகிதமாக நீராடி வழிபட்டு பிதுர்களுக்கும், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தார்.
அதற்கு அப்பால் தென்பாகத்தில் பைசாகமோசனம் என்ற தீர்த்தம் ஒன்று உள்ளது.
அதில் நீராடி வழிபடுவோர் யமபுரியைக் கண்ணால் பார்க்க மாட்டார்கள்.
அதற்கு தென்பக்கத்தில் பரஞ்ஜோதியாக மகாபாவங்களைத் தொலைக்கும் தண்டபாவம் என்று பெயர் பெற்ற புண்ணிய தீர்த்தம் ஒன்று உள்ளது.
அதில் நீராடி வழிபடுவோர் சகல விருப்பங்களையும் இவ்வுலகில் அனுபவித்து முடிவில் முக்தியைப் பெறுகின்றனர்.
அதற்கு தென்பாகத்தில் ஸ்ரீதாமிரபரணியுடன் புண்ணியமான கடனா நதி சேர்கிறாள்.
அந்த கடனா சங்கமத்தில் நீராடி வழிபடுவது விசேஷமான பலனைத் தருகிறது.
இந்த இடத்தில் அந்தர்வாகிணியாக யமுனா நதியும், கடனா நதியும், ஸ்ரீதாமிரபரணியுடன் சேர்வதால் அது முக்கூடல் (தென்திருபுவனம்) என்று கூறப்படுகின்றது.
இம்மூன்று நதிகள் சேரும் திரிவேணி சங்கமத்தில் நீராடி வழிபடுவோன் இவ்வுலகில் சகல விருப்பங்களையும் அனுபவித்து முடிவில் பரமசிவனின் சாயுஜ்யத்தைப் பெறுவான்.
அதற்கு தென்பாகத்தில் சிறப்பான மாண்டவ்ய தீர்த்தம் ஒன்று உள்ளது. அதில் நீராடி வழிபடுவோன் பரிசுத்தமான சத்யலோகத்திற்குச் செல்கிறான்.
தேவேந்திர மோட்ச தீர்த்தத்தின் வட பாகத்தில் விநாயக தீர்த்தம் ஒன்று உள்ளது. இதில் ஒரு தடவையாவது நீராடி வழிபடுவோன் தீர்க்கமான ஆயுளை அடைகிறான்.
சுகமாக வாழ்வான். அதற்கு வடபுறம் நன்மை பல தரும் கர்மதீர்த்தம் ஒன்று உள்ளது. அதைத் தொடுவோர் கர்ம பாசத்தில் இருந்து நீங்கி விடுகின்றனர்.
அதற்கும் சமீபத்தில் வடபாகத்தில் ராட்சசி மோசனம் என்ற சிறந்த தீர்த்தம் உள்ளது. அதைக்கண்டவுடன் மனிதனின் பாவங்கள் எல்லாம் விலகும்.
- இதனால் கங்கை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தாமிரபரணி நோக்கி பாய்ந்தது. பின் பார்வதி தேவியை வட்டமிட்டு நின்றது.
- ஆனாலும் பார்வதியின் கோபம் தணியவில்லை. இதனால் கங்கையின் கடமையும் முடியவில்லை.
ஒரு சமயம் அத்திரி மகரிஷியின் சீடர் பிருங்கி முனிவர் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வந்தார். அங்குள்ள ஆசிரமத்தில் அவர் தவம் இருக்க துவங்கினார்.
இவரின் தவத்தினை மெச்சிய பார்வதி தேவி சிவபெருமானிடம், ''உங்களை நோக்கி ஒரு பக்தர் தவம் இருக்கிறார்.
அவருக்கு அருளாசி வழங்கலாம் வாருங்கள்'' என்றழைத்தார். சிவபெருமானும் அந்த ஆசிரமத்துக்கு வந்து தாயாருடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.
ஆனால் சிவபெருமான் மீது அதிக பற்று கொண்ட பிருங்கி முனிவர் சிவபெருமானை கண்டவுடன் ஆனந்தம் அடைந்து பார்வதிதேவியை தள்ளிவிட்டுவிட்டு சிவனை மட்டும் சுற்றி வணங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த பார்வதி தேவி கோபமாகி திருப்புடைமருதூர் தாமிரபரணி கரையில் வடபுறம் வந்து நின்றார்.
உடனே சிவபெருமான் தன் தலையில் உள்ள கங்கையை அவிழ்த்து விட்டு, ''பார்வதி தேவியின் கோபத்தினை தாழ்த்தி அழைத்து வா... அது உடன் கடன்'' என்று அனுப்பிவைத்தார்.
இதனால் கங்கை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தாமிரபரணி நோக்கி பாய்ந்தது. பின் பார்வதி தேவியை வட்டமிட்டு நின்றது.
ஆனாலும் பார்வதியின் கோபம் தணியவில்லை. இதனால் கங்கையின் கடமையும் முடியவில்லை.
ஆகவே ''கடன்பட்ட கங்கை நதி கடனா நதி''யாக இங்கே ஓடி கொண்டிருக்கிறது.
- இதன் காரணமாக தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை பற்றிய தெளிவு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
- அந்த வகையில் திருப்புடைமருதூர் புராணமும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் வெளியில் வந்தது.
தாமிரபரணி நதியின் இரு புறங்களிலும் 274 சிவாலயங்களை மகான்களும், சித்தர்களும், மன்னர்களும் உருவாக்கினார்கள்.
இந்த 274 சிவாலயங்களும் ஒவ்வொரு தல புராணத்தையும், சிறப்பையும் தன்னகத்தே கொண்டவை.
இந்த 274 சிவாலயங்களின் தனித்துவமான சிறப்புகளையும், பெருமைகளையும் பல்வேறு புராணங்களில் நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளனர்.
அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம், சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தல புராணம், தென்காசி தலபுராணம், கருவை தல புராணம், திருச்செந்தூர் புராணம் போன்றவை முக்கியமானவை.
இந்த புராணங்கள் மூலம் தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை நாம் துல்லியமாக அறிந்து, புரிந்து கொள்ள முடியும். துரதிர்ஷ்டவசமாக கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த புராணங்களை தமிழர்கள் குறிப்பாக தென்பாண்டி மக்கள் சுத்தமாக மறந்து அல்லது தெரியாமலேயே போய்விட்டனர்.
சமீப காலமாக இந்த புராணங்கள் குறித்து மக்கள் மத்தியில் சற்று ஆர்வம் வந்துள்ளது.
இதன் காரணமாக தாமிரபரணி நதிக்கரை சிவாலயங்களை பற்றிய தெளிவு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் திருப்புடைமருதூர் புராணமும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் வெளியில் வந்தது.
உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், திருப்புடைமருதூர் புராணத்தை மீண்டும் அச்சிட்டு வெளியிட்டது.
திருப்புடைமருதூர் புராணம் அருமையான தமிழ் இலக்கியமாகும். திருமால், பிரம்மன், இந்திரன் மற்றும் பலர் திருப்படைமருதூர் வந்து வரம் பெற்ற தகவல்கள் இந்த புராணத்தில் இடம் பெற்றுள்ளன.
ராமனே சீதையைப் பிரிந்தபோது, இந்த தலத்துக்கு வந்து வழிபட்டான் என்றும், ராமனிடம் நாறூம்பூநாதர், 'நீ உன் தேவியைப் பெறுவாய்...' என்று வரம் வழங்கி ஆசிர்வதித்தார் என்றும் இந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமாயணக் கதையின் பெரும்பகுதி திருப்புடைமருதூர் புராணத்தின் வீரமார்த்தாண்டப் படலத்தில் உள்ளது.
இந்த புராணம் கடவுள் வாழ்த்து, பாயிரம், அவையடக்கம், கயிலைச் சிறப்பு, நாட்டுப்படலம், நகரப் படலம், தல விசேடம், தீர்த்த விசேடம், மூர்த்தி விசேடம், நடம்புரி படலம், விருத்திர வதைப்படலம், இந்திரன் பழிதீர்த்த படலம், சீதரப்படலம், ஆதி மனுப்படலம், ஆலயம் காண்படலம், சதுமுகப் படலம், பதியத்தி தீர்ந்த படலம், அவிர்த்தானப் படலம், வால சதானந்தப் படலம், புறமதம் தீர்த்த படலம், அலதந்தப் படலம், கருவூர்ச் சித்தப்படலம், அகத்தியப் படலம், தாரக உபதேசப் படலம், வீரமார்த்தாண்டப் படலம், தாம்பிர வன்னிப் படலம், ஆத்தி வனப் படலம், புட்வ வனப் படலம், அரிகைப் படலம், மூன்றீசுவரப் படலம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
- தஞ்சைத் தரணியில் திருவிடை மருதூரில் காவேரிக் கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
- இங்கும் மருத மரமே தல விருட்சம். இங்கு இறைவன் மகாலிங்கேசுவரர். அம்பாள் ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை.
அடுத்ததாக, மைசூரில் உற்பத்தியாகி தமிழகத்தில் கடலோடு கலக்கும் புண்ணிய நதி காவிரி.
தஞ்சைத் தரணியில் திருவிடை மருதூரில் காவேரிக் கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
இங்கும் மருத மரமே தல விருட்சம். இங்கு இறைவன் மகாலிங்கேசுவரர்.
அம்பாள் ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை.
செம்மொழித் தமிழையும், சைவ மொழியையும் இம் மண்ணில் வாழ்வாங்கு வாழச் செய்த ஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நாவுக்கரசர் ஆகிய மூவராலும் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட திருத்தலம்.
தைப்பூசத் திருவிழா, வைகாசி பிரம்மோற்சவ உற்சவம், திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை மகா தீபம், சோமவார வழிபாடு போன்ற உற்சவங்கள் இத்தலத்தில் வெகு பிரசித்தம்.
ஜோதி மகாலிங்கர் சாந்நித்தியமிக்க தெய்வமாய் எழுந்தருளியிருக்கும் இத்திருத்தலம் வடபுலத்திற்கும், தென் புலத்திற்கும் நடுப்பகுதியில் அமைந்திருக்கிற காரணத்தால், இடைத்தலமாக கருதப்பட்டு மத்தியார்ச்சுனம் என்று வணங்கப்பட்டு வருகிறது.
சோழ மன்னர்களால் கட்டப்பட்ட எழில் நிறைந்த கலைக் கோவிலாக விளங்குகிறது.
இனி, கடைத் தலமான புடார்ச்சனத்தைக் காணலாம்.
- இத்தலம் தென் புலத்தில் மருதவனத்தில் அமைந்த காரணத்தால், கடைத்தலம் என்ற பொருள்பட, வடமொழியில் புடார்ச்சுனம் என அழைக்கப்படலாயிற்று.
- இறைவனும் புடார்ச்சுனேசுவரர் என்ற நாமத்தால் வணங்கப்பட்டு வருகிறார்.
தாமிரபரணி பாய்ந்தோடி செழிப்பைத் தந்திருக்கும் மருத மரக் காட்டுப்பகுதிக்கு ஒரு சமயம் கொடிய வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக, தன் படை பரிவாரங்களோடு மன்னன் ஒருவன் வந்திருந்தான்.
நீண்ட நேரம் அங்குமிங்கும் அலைந்து திரிந்தும், அவர்களது கண்ணில் எந்த ஒரு கொடிய விலங்கோ, வேறு பிராணிகளோ தென்படவில்லை.
இதனால் மன்னனுக்கு மனச் சோர்வும், ஏமாற்றமும் ஏற்பட்டது.
எல்லோரும் களைப்பாக சற்றே மருதமரச் சோலையில் ஓய்வெடுத் திருந்த சமயத்தில் தான் அந்த அதிசயம், மின்னல் போல் தென் பட்டு ஓடி மறைந்தது.
அதாவது, அழகிய புள்ளிமான் ஒன்று மின்னலாய் எங்கிருந்தோ பாய்ந்து வந்து அவர்களின் கண்முன்னே துள்ளிக் குதித்து ஓடி ஒளிந்தது.
இதனைக் கண்ட மாத்திரத்தில் மன்னனுக்கும், படை பரிவாரங்களுக்கும் ஒரே ஆனந்தப் பரவசம்.
துள்ளி எழுந்து, புயல் வேகத்தில் அதனைப் பின் தொடர ஆரம்பித்தனர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த மானின் இருப்பிடத்தை கண்டு பிடித்தனர்.
அதனை பிடித்து விட எண்ணிய மன்னன், தனது வில்லில் இருந்து கூரான அம்பை குறிபார்த்து எய்தான்.
அவன் வைத்த குறி எப்போதும் தப்புவதில்லை.
இப்போதும் அதே பாணியில் 'விர்'ரெனப் பாய்ந்த அம்பு, மானின் மேல் சென்று தைத்தது.
அடுத்த கணம் நடந்ததுதான் யாருமே நம்ப முடியாதது மட்டுமல்ல, எதிர்பாராத ஒன்றாகவும் அமைந்து விட்டது.
அது இறைவனின் திருவிளையாடல் அன்றோ! அம்பால் தைக்கப்பட்ட மான் முன்னிலும் விரைவாக ஓடத் துவங்கியது.
காவலாட்களும் விடாப்பிடியாய் பின்னால் துரத்திச் சென்றனர்.
ஒரு கட்டத்தில், ஓட்டமாய் ஓடிச் சென்ற மான் மிகப்பெரிய மருத மரத்தின் அருகே சென்று மாயமாய் மறைந்தும் போனது.
இதனால் தாங்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது மன்னனுக்கு.
அருகே கிடந்த கோடாரி ஒன்றை வேகமாக எடுத்தான். மருத மரத்தை பலங்கொண்ட மட்டும் ஓங்கி வெட்டத் துவங்கினான்.
அந்த வேளையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக அந்த அதிசயக்காட்சி அரங்கேறியது.
ஆம்! மான் ஓடி ஒளிந்த மருத மரத்திலிருந்து குருதி வெளிப்பட ஜோதிப்பிழம்பாய் சுயம்பு மூர்த்தியாய் இறைவன் வெளிப்பட்டான்.
அங்கே ஆயிரம் சூரியனின் ஜோதிப் பிரகாசம்.
இந்த அதிசயக் காட்சியைக் கண்ட மன்னவன், பொங்கிப் பெருகிய கண்ணீர் வெள்ளத்தில் இறைவனை மானசீகமாக வணங்கி நின்றான்.
இறைவன் தன்னை ஆட்கொண்டு, அந்த மருதவனத் தலத்தில் வெளிப்பட்ட காரணத்தால், பரம்பொருளுக்கு அவ்விடத்தில் ஒரு திருக்கோவில் எழுப்பிட உளங்கொண்டான்.
அதனால், அவ்விடத்தில் மகேசனுக்கு அதி அற்புத கலைக்கோவில் ஒன்று உருவானது.
இத்தலம் தென் புலத்தில் மருதவனத்தில் அமைந்த காரணத்தால், கடைத்தலம் என்ற பொருள்பட, வடமொழியில் புடார்ச்சுனம் என அழைக்கப்படலாயிற்று.
இறைவனும் புடார்ச்சுனேசுவரர் என்ற நாமத்தால் வணங்கப்பட்டு வருகிறார்.
இவ்வாறு, மருத மர வனத்தில் சுயம்பு மூர்த்தியாக மூன்று தலங்களில் எழுந்தருளி நூற்றாண்டுகள் பல கடந்த பின்னரும், மானசீகமாக மல்லிகார்ச்சுனம் (தலைத்தலம்), மத்தியார்ச்சுனம் (இடைத்தலம்), புடார்ச்சுனம் (கடைத்தலம்) என லட்சோப, லட்ச மக்களால் போற்றி வணங்கப்பட்டு வருகிறது.
தொன்று தொட்டு நாகரீகச் செழிப்பு மிக்க தலங்களாக இம்மூன்றும் விளங்கி வருவதோடு, எதிர்காலத்தில் இன்னும் பல நூற்றாண்டுகள் உன்னதமாய் விளங்கும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.
- அம்மன் சன்னதியின் நுழைவு வாயிலின் இடப்புறத்தில் மருத மரமும், மல்லிகைக் கொடியும் சேர்ந்து இடம் பெற்றுள்ளன.
- கருவறையில் மல்லிகார்ச்சுன சுவாமி தரையோடு தரையாகக் காட்சி தருகிறார்.
ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் உள்ளது.
மலை உச்சியில் உள்ள ஸ்ரீசைலம் தலத்தின் ஆயிரம் மீட்டருக்கு கீழே நல்ல மழைக்காடுகளின் வட திசை நோக்கிப் பாயும் கிருஷ்ணா நதி பாதாள கங்கை என்ற பெயரில் சலசலத்து ஓடுகிறது.
இங்கே அம்பாள் பிரமதாம்பிகை.
ஸ்ரீசைலம் பனிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் இரண்டாவதாக வைத்து வணங்கப்படுகிறது.
அவ்வாறே சக்தி பீடங்களுள் ஒன்று என்ற பெருமையும் இதற்கு உண்டு.
அம்மன் சன்னதியின் நுழைவு வாயிலின் இடப்புறத்தில் மருத மரமும், மல்லிகைக் கொடியும் சேர்ந்து இடம் பெற்றுள்ளன.
கருவறையில் மல்லிகார்ச்சுன சுவாமி தரையோடு தரையாகக் காட்சி தருகிறார்.
கருவறைக்குள் பக்தர்கள் தாராளமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவர்களே தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்யலாம். தொட்டு வணங்கலாம்.
பக்தர்கள் தங்கள் தலையை லிங்கத்தின் மீது அழுத்தி வழிபடவும் செய்யலாம்.
சுயம்பு மூர்த்தியான மல்லிகார்ச்சுனர் சாந்நித்தியமிக்க தெய்வமாக வடபுலத்தில் எழுந்தருளி இருப்பதால் இது தலைத்தலம் அல்லது முதல் தலம் என கருதி வணங்கப்பட்டு வருகிறது.
- மருத மரத்தை வடமொழியில் அர்ச்சுன விருட்சம் என அழைப்பதுண்டு.
- மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் திருத்தலங்கள் நமது மண்ணில் அநேகம்.
மருத மரத்தை வடமொழியில் அர்ச்சுன விருட்சம் என அழைப்பதுண்டு.
மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் திருத்தலங்கள் நமது மண்ணில் அநேகம்.
ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான புராதனப் பெருமையும், இறைவன் சுயம்பு மூர்த்தியாக வெளிப்பட்ட தன்மையும், பாரத நாட்டின் பழம் பெரும் புண்ய நதிக்கரையில் அமைந்த திருக்கோவில் எனவும் பல அம்சங்கள் ஒன்றாகப் பொருந்தி நிற்கும் திருத்தலங்கள் மூன்று ஆகும்.
நமது சான்றோர்கள் காலம் காலமாக இந்த தலங்களை புண்ணிய இடங்களாக மதித்து பேணியும், போற்றியும், வணங்கியும் வருகின்றனர்.
அவை மல்லிகார்ச்சுனம் (ஸ்ரீசைலம்), மத்தியார்ச்சுனம் (திருவிடை மருதூர்), புடார்ச்சுனம் (திருப்புடை மருதூர்) எனப்படும் மூன்று தலங்களாகும்.
இவை ஒன்றுக்கொன்று சமமான அம்சங்களைக் கொண்டு விளங்கும் காரணத்தால் முதல் தலம், இடைத்தலம், கடைத்தலம் என்றும் பகுக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இனி அவைகள் ஒவ்வொன்றின் மகத்துவத்தை வரிசையாகக் காணலாம்.
- இதிகாச காப்பிய நூல்களான மகாபாரதம், ராமாயணம் ஆகிய நூல்களில் தாமிரபரணியின் புராதனப் பெருமை பலபட சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
- இப்பேர்பட்ட பெருமைமிக்க தாமிரபரணி, துவக்க காலத்தில் தண்பொருந்தப்பேதாறு என்றே எல்லா இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாரம்பரிய வழக்கப்படி கடந்த 2018ம் ஆண்டு புண்ணிய நதியாம் தாமிரபரணியில் நடைபெற்ற மகாபுஷ்கரத் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி மகிழ்ந்தனர் என்பது நடந்து முடிந்த வரலாறு.
இதிகாச காப்பிய நூல்களான மகாபாரதம், ராமாயணம் ஆகிய நூல்களில் தாமிரபரணியின் புராதனப் பெருமை பலபட சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
இப்பேர்பட்ட பெருமைமிக்க தாமிரபரணி, துவக்க காலத்தில் தண்பொருந்தப்பேதாறு என்றே எல்லா இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதிகை மலையில் உற்பத்தியாகி, பாபநாசத்தில் சமவெளிப் பகுதியில் இறங்கி, பல ஊர்கள் வழியாகப் பாய்ந்து வளப்படுத்தி, வங்கக் கடலில் சேர்ந்த பூ மங்கலம் அருகே பழைய காயலில் சங்குமுக தீர்த்த கட்டத்தில் கடலோடு சங்கமித்து தன் பயணத்தை நிறைவு செய்கிறது.
அவ்வாறு செல்லும் வழியெல்லாம் செல்வச் செழிப்பை மக்களுக்கு வாரி வாரி வழங்கிய வண்ணம் தாமிரபரணித் தாயானவள் கருணை உள்ளத்தோடு பசிப்பிணி தீர்த்து வருகிறாள்.
அத்தோடு சைவத்தையும், தமிழையும் பாங்காய் வளர்த்து வருகிறாள்.
அவ்வாறு பாய்ந்து வரும் வேளையில், தெற்கிலிருந்து வடக்காக ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும் மருதமரச் சோலையின் நடுவே தாமிரபரணியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள திருத்தலமே திருப்புடை மருதூர்.
தல விருட்சமான மருத மரத்தின் பெயராலே இத்தலம் அழைக்கப்படுவது சிறப்பாகும். மருத மரத்திற்கு ஏன் அத்தகைய சிறப்பு ஏற்பட்டது என்பதை இனி காணலாம்.
- உலக நாடுகளின் வரலாறை படித்துப் பார்த்தால் பொதுவான உண்மை ஒன்று நமக்குத் தெரியவரும்.
- அதாவது, எங்கெல்லாம் வற்றாத ஜீவ நதிகள் செழிப்பாகப் பாய்கின்றதோ, அந்தப் பகுதிகளில்தான் மனித நாகரீகம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
உலக நாடுகளின் வரலாறை படித்துப் பார்த்தால் பொதுவான உண்மை ஒன்று நமக்குத் தெரியவரும்.
அதாவது, எங்கெல்லாம் வற்றாத ஜீவ நதிகள் செழிப்பாகப் பாய்கின்றதோ, அந்தப் பகுதிகளில்தான் மனித நாகரீகம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
இந்த யதார்த்த நிலை நமது புண்ணிய பூமிக்கும் பொருந்தும் என்பதை நாம் பல நூல்கள் வாயிலாக படித்துத் தெளிந்திருக்கிறோம்.
நமது பெருமைமிகு புண்ணிய நாட்டில் பிரம்ம புத்திரா, துங்கபத்திரா, சிந்து, கங்கை, கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, சரசுவதி, காவேரி, யமுனை, பரணிதா, தாமிரபரணி என்கிற பன்னிரெண்டு ஜீவ நதிகளும் பல நூற்றாண்டுகளாக ஆன்றோர்களால் புண்ணிய நதிகளாக போற்றப்பட்டும், வணங்கப்பட்டும் வருகிறது.
இந்த நதிகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட ராசி உண்டு.
அந்த வகையில் தாமிரபரணி (விருச்சிகம்), பிரம்மபுத்திரா (கும்பம்), துங்கபத்ரா (மகரம்), சிந்து (தனுசு), கங்கை (மேஷம்), கோதாவரி (சிம்மம்), நர்மதை (ரிஷபம்), கிருஷ்ணா (கன்னி), சரசுவதி (மிதுனம்), காவேரி (துலாம்), யமுனை (கடகம்), பரணிதா (மீனம்) என சான்றோர்களால் வகுக்கப்பட்டுள்ளது.
வான சாஸ்திர கணிப்பின்படி குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் பன்னிரெண்டு ஆண்டுகள் சஞ்சாரம் செய்வதாக ஐதீகம்.
அந்த வகையில், நமது புண்ணிய நதிகள் ஒவ்வொன்றும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் பிரவேசிக்கையில் அதனை மகா புஷ்கர விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அந்த வேளையில் அதாவது மகா புஷ்கரம் கொண்டாட்டத்தில் ஆன்றோர்களும், சான்றோர்களும், பக்தர்களும், பொதுமக்களும் நாடு முழுவதிலும் இருந்து கிளம்பி வந்து முக்கியமான தீர்த்த கட்டங்களில் புனித நீராடி இறையருள் பெற்று பேரின்பம் அடைகின்றனர்.
பாவம் தொலைத்து புண்ணியம் சேர்க்கின்றனர்.
- இறைவன் தனது திருமேனியை இடப்பக்கமாய் சாய்த்திருப்பது தனது கூப்பிட்ட குரலை கேட்பதற்காகத்தான் என்பதைக் கண்டு உள்ளம் பதைத்தார்.
- இந்த சாதாரண அற்பனுக்கு இறங்கி தலைசாய்த்த கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
தங்களது தவ வலிமையாலும், தீர்க்க தரிசன சிந்தையாலும் இறைவனை கண்ணார தரிசித்து பேரின்பப் பேற்றை அடைந்தவர்கள் யோகிகள் ஆவர்.
நாம் அவர்களை சித்தர்கள் என்றும் முனிவர்கள் என்றும் சொல்லி அழைத்து மகிழ்கிறோம்.
இவ்வாறான யோகிகள் வரலாற்றில் தனக்கென ஒரு முக்கியத்துவம் பெற்று விளங்குபவர் கருவூர் சித்தர்.
தலங்கள் தோறும் சென்று பரம்பொருளை தரிசித்து மகிழ்ந்த வேளையில் ஒரு சமயம் இந்த மருதவன சோலைக்கும் வந்திருந்தார்.
குன்றாத இளமைப் பருவத்தினரான தாமிரபரணி அன்றும் தன் சீரிலிமை பரிணமிக்க, பொங்கிப் பெருகும் வெள்ளமாய் கரைபுரள ஓடிக் கொண்டிருந்தாள்.
ஆற்றின் மறுகரையில் கருவூர் சித்தர்.
இக்கரையில் மருதமரச் சோலையின் நடுவே, வாசமிக்க மருதமரப்பூக்கள் மலர்ந்து தேன் சொரிய, இனிமையான சூழலில் முக்கண் முதல்வனின் திருக்கோவில் திவ்யமாய் நின்று கொண்டிருந்தது.
கரை புரண்டோடும் வெள்ளம் கருவூர் சித்தரின் பக்திக்கு முன்னே என்ன செய்ய முடியும்?
அக்கரையில் நின்றபடியே, தன் உள்ளமெல்லாம் வியாபித்து நிற்கும் எம்பெருமானை உள்ளன்போடு அழைக்கலானார் குழந்தை தனது தாயை அழைக்கும் நேசக் குரலில்.
'நாறும்பூ நாதா! உன் அடியேன் தரிசனம் காண வந்து வழி கிடைக்காமல் இக்கரையில் கிடந்து தவிக்கிறேன். உன் திருமுக தரிசனத்திற்கு வழி சொல்ல மாட்டாயா?
முக்கண் முதல்வனே மனம் இறங்க மாட்டாயா?' என்று உரக்கக் குரல் கொடுத்து நின்றார்.
தவயோகியின் பாசமிக்க குரல் மறுகணமே அந்த வனாந்திரப் பகுதியெங்கும் பரவி எதிரொலித்தது.
தன் அடியார் ஒருவர் பரிதவித்திருக்க, பாராமுகமாய் கிடப்பாரோ பரம்பொருள்? தன் பக்தனின் அழைப்பைக் கேட்க சற்றே இடப்புறமாய் தலை சாய்த்து மன்னிப்பாய்க் கேட்டிருந்த சங்கரன், அடியார்க்கு பதிலளிக்கும் விதமாக உரைத்தார் இப்படி. என்னே பேரன்பு, என்னே அதிசயம்.
'அன்பனே! உன் விருப்பப்படி எனது ஆலயத்திற்கு வருவதற்கு சிரமமேதும் பட வேண்டாம். ஆற்றுக்குள் இறங்கி நடந்து வர வழி கிடைக்கும்.
தயங்காமல் வா திருமுக தரிசனத்திற்கு' இறைவனது இந்த அசரீரி கேட்ட மறுகணம் தவ முனிவரும் சற்றும் தாமதிக்காது ஆற்றுக்குள் இறங்கினார்.
இறைவனின் ஆணைக்கிணங்கி, தாமிரபரணியும் இரு பக்கமும் விலகி, அந்த சிவபக்தனுக்கு வழி விட்டு நிசப்தமாய் பார்த்திருந்தது.
ஆவல் ததும்பும் உள்ளத்தோடு வேக, வேகமாய் ஆற்றைக் கடந்த கருவூர் சித்தர் கரையேறி, சோலைக்குள் நடக்கலானார்.
சற்று தூரத்தில் ஆலகால விஷம் உண்ட அண்ணல் எழுந்தருளியிருக்கும் திருக்கோவில்.
கண்களில் பெருகிய நீரோடு, மகிழ்ச்சியோடு தன் பரம்பொருளை தரிசிக்கும் ஆசையில் ஓடோடிப் போனார் கோவிலுக்குள்.
அவர் சிந்தையும், செயலும், ஆசையும், விருப்பமும் எல்லாமுமாகி நின்றது இறைவனின் திருக்காட்சியே.
உள்ளம் குளிர நாறும்பூ நாதனின் திருமேனி அழகைக் கண்டு மயங்கி, ஆனந்தக் கூத்தாடினார். பாடினார்.
அங்குமிங்கும் ஓடினார். எங்குமாய் பரவி ஒளிவீசி நின்ற பொன்னார்மேனியனின் சொக்க வைக்கும் அழகில் பரவசமானார்.
அந்த பேரின்பம் கிடைத்த வேளையில் ஒரு விசயத்தை கவனிக்கவும் தவறவில்லை.
அதாவது, இறைவன் தனது திருமேனியை இடப்பக்கமாய் சாய்த்திருப்பது தனது கூப்பிட்ட குரலை கேட்பதற்காகத்தான் என்பதைக் கண்டு உள்ளம் பதைத்தார்.
இந்த சாதாரண அற்பனுக்கு இறங்கி தலைசாய்த்த கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அந்த சமயம் அந்த துறவியின் மனதில் சமயோசிதமாக ஒரு யோசனை உதித்தது.
சகல உயிர்களும் சுகமாக வாழ நினைப்பதும், பிரார்த்தனை செய்வதும், உழைப்பதும் தானே சித்தர்களின் செயல்பாடு. கருவூர் சித்தர் மட்டும் விதி விலக்கா?
எனவே, தன் உள்ளத்தில் அரும்பி நின்ற அந்த பேராசையை, விண்ணப்பமாகவே இறைவனிடம் வைத்தார் கருவூர் சித்தர் இப்படி.
'இறைவா முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கெல்லாம் தலைவனே, உலகத்து உயிர்களையெல்லாம் ஆதரித்துக் காப்பவனே இன்று இந்த கடையவனுக்காக காது கொடுத்துக் கேட்பதற்கு சற்றே தலை சாய்த்து இரக்கப்பட்ட இந்த வரத்தை இனி எக்காலத்திலும் இத்தலத்தில் நம்பிக்கையோடு உன்னை நாடி வரும் அடியார்களின் குரலுக்கும் இவ்வண்ணமே செவி சாய்த்து, அருள்பாலித்திருக்க வேண்டும் என்பதே இச்சிறியோனின் விண்ணப்பம்' என்று சொல்லி பணிந்து நின்றார் சித்தர்.
அடியாரின் கோரிக்கையை அகமகிழ்ந்து ஏற்றுக் கொண்ட இறைவனும், 'அப்படியே ஆகட்டும், வரமளித்தேன்' என்றார்.
ஆக, அன்றைக்கு தனது அடியார் ஒருவரின் கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்த்து வரமளித்த வள்ளல் பெருந்தகையான பரம்பொருள், இன்றளவும் நம்பிக்கையோடு நாடி வரும் அடியார்களுக்கு வேண்டிய வரமளித்து அவர்களை ஆதரித்துக் காப்பது திருப்புடை மருதூரின் சிறப்பம்சமாக காலம், காலமாக அடியார்களால் போற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






