என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.
- அதிலும் எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.
திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது.
திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.
அதிலும் எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.
ஞாயிறுக்கிழமை - எலுமிச்சை சாதம்
திங்கட்கிழமை - தேங்காய் சாதம்
செவ்வாய், புதன்கிழமை - தக்காளி, கீரை சாதம்
வியாழன், வெள்ளிக்கிழமை - பொங்கல் சாதம்
சனிக்கிழமை - புளியோதரை
- இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.
- பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும்.
இவர்களில் மகேஸ்வரர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன.
இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது.
இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள்.
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும்.
பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது.
ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையாக மதித்தனர் நம் முன்னோர்கள்.
ஆகவே முத்தொழில் முதல்வனான சிவனுடைய தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்டனர்.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.
பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது.
சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம்.
சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.
சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.
இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்அதிர முழக்கமிடுவார்கள்.
- கிரிவலம் செல்ல நினைத்து ஒர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
- இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும்.
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை.
காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள்.
அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது.
அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
கிரிவலம் செல்ல நினைத்து ஒர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும்.
திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும்.
மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலைமுறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.
கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது.
இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன.
இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.
- திருவண்ணாமலையில் நாம் எந்த கிழமை கிரிவலம் செல்கிறோமோ, அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.
- அந்த வகையில் திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலையில் நாம் எந்த கிழமை கிரிவலம் செல்கிறோமோ, அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில் திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இது தொடர்பாக கூறப்படும் புராண நிகழ்ச்சி வருமாறு:
ஒரு காலத்தில் அசுரர்கள் தங்களுக்கு நிறைய செல்வங்களை வழங்க வேண்டும் என்று லட்சுமியை வற்புறுத்தினார்களாம்.
ஆனால் திருமகள் அவர்களின் பேராசைக்கு இணங்காமல் அவர்களிடமிருந்து தப்பித்து திருவண்ணாமலைக்கு வந்தாள்.
அங்கு தைல எண்ணையில் தீபமாய் உறைந்து தீபமாக கிரிவலம் வந்தாள்.
அன்றைய தினம் ஒரு வெள்ளிக்கிழமை ஆகும்.
அதனால் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் இல்லறப் பெண்களுக்கு லட்சுமி கடாட்சமும், இல்லற இன்பமும், அமைதியும், மாங்கல்ய பலமும் நிச்சயமாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
எதிரிகளால் ஏற்படுகின்ற பில்லி, சூனியம், ஏவல் முதலான துன்பங்களை அகற்றி மனகோளாறுகளை நீக்க வல்லது இந்த வெள்ளிக்கிழமை கிரிவலமாகும்.
எனவே வெள்ளிக்கிழமை கிரிவலத்தை தவற விடாதீர்கள்.
- இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சன சன்னதியாகும்.
- இங்கு ஒரு கல்யாண மண்டபம் கல்யாணம் நடத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரகாரத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் இங்கிருக்கும் கம்பாட்டு இளையநார் சன்னதி.
இந்த சிறப்பான சன்னதியை மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டினார்.
இங்கே நான்கு அறைகள் உள்ளன. பிரார்த்தனை செய்வதற்காக மூன்றாவது அறை பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நான்காவது அறையில் முருக கடவுளின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.
முதலாவது அறையில் பல அரிய வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழியாகத்தான் இரண்டாவது அறைக்கு செல்ல முடியும்.
மேலும் சிவாகங்கா, விநாயகர் சன்னதி, கம்பாட்டு இளையநார் சன்னதிக்கு பின்புறமும் ஆயிரம்கால் மண்டபம் முன்புறமும் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள விமானம் மிகவும் சிறப்பாக பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அருணகிரிநாதர் நின்றபடி முருக பெருமானை பிராத்தனை செய்கிறார். இந்த சன்னிதி கோபுரதில்லையனர் சன்னதி என்று அழைக்கப்படுகிறது.
இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சன சன்னதியாகும்.
இச்சன்னதி தெற்குபுரத்திலிருந்து பல்லால மகாராஜா கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது.
இங்கு ஒரு கல்யாண மண்டபம் கல்யாணம் நடத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சன்னதியில் லிங்கம், நந்தி, மற்றும் தேவியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
பல்லாலா மகாராஜா கோபுரம் மன்னர் பல்லாலாவால் கட்டப்பட்டது.
அதனால்தான் பல்லாலா மன்னர் இறந்த பின்னர் சிவனடியாரே இறுதி சடங்குகள் செய்தார் என புராணம் கூறுகிறது.
இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அருணாச்சலேஸ்வரரே பல்லாலாவின் மகனாக உருவெடுத்து கடமைகளை செய்தார்.
கோவிலின் நாலாவது பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது.
பல்லாலா கோபுரத்தின் கிழக்குப்புறத்தில் மன்னர் பல்லாலாவின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது பிரகாரத்தில் 12ம் நூற்றாண்டு காலத்து லிங்கம், சிலைகள், நிறுவப்பட்டுள்ளது.
இத்துடன் கோபுர நுழைவாயிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு புறத்தில் கொடிகம்பமும் வடக்கு புறத்தில் உண்ணாமலை அம்மன் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பிரகாரத்தில் சிவலிங்கத்தை பிரதிபலிக்கும் அனைத்து உருவங்களும் மற்ற தெய்வங்களும் இருக்கிறது.
இந்த பிரகாரம் தான் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.
- ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சேவிக்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள்.
- இந்த மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது.
ஐந்தாவது பிரகாரத்தில் நான்கு திசைகளில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அவை வருமாறு:
திருமஞ்சன கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், பேய் கோபுரம், மற்றும் ராஜா கோபுரம்.
ராஜகோபுரம் 217 அடி உயரம் மற்றும் 11 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாகும்.
விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியுடன் கட்டப்பட்ட இக்கோபுரம் தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகும்.
இத்துடன் ஐந்தாவது பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் அத்துடன் சேர்ந்த சிவகங்கா தெப்பகுளம் இவை யாவும் மன்னர் கிருஷ்ணதேவராயர் புகழ்பாடும்.
குறிப்பாக இங்கு இருக்கும் ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் சிறந்த கைவினைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்மண்டபம் திருவாதிரை நட்சத்திரம் தோன்றும் நாள் அன்று திருமஞ்சனம் நடைபெறுவதற்காக உபயோகிக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சேவிக்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள்.
இந்த மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது.
இங்கு சிவா லிங்கம் உள்ளது. பாதாளலிங்கம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் ஸ்ரீ ரமண மகரிஷி தியானத்தில் அமர்ந்திருந்தார்.
- திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது.
- இந்த கட்டமைப்பானது உலகளவில் போற்றும்படி அமைந்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த கட்டமைப்பானது உலகளவில் போற்றும்படி அமைந்துள்ளது.
கடந்த 1000 ஆண்டு காலமாக நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் இக்கோவிலை மிக சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியுள்ளது.
இந்த கோவிலை பற்றி தமிழ் இலக்கணத்தில் முன்னணி கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ள காவியங்கள் இன்றும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது.
மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பற்றி ஒரு தமிழ் மகாகவியான அருணகிரிநாதர் அவருடைய படைப்பில் சிறப்பாக எழுதியுள்ளார்.
'திருப்புகழ்' என்ற மகா கவிதை இங்கு தான் எழுதி அற்பணிக்கப்பட்டது.
மற்றொரு தமிழ் கவிஞர் மகாகவி முத்துசாமி தீட்சிதர் இங்குதான் அவருடைய படைப்பான கீர்த்தி அருணாச்சலம் என்ற கவிதையை எழுதி வெளியிட்டார்.
இக்கோவிலில் இன்றைய காலகட்டத்தில் மொத்தமாக ஐந்து பிரகாரங்கள் உள்ளன
இந்த ஐந்து பிரகாரங்களிலுமே நந்திகள் அருணாச்சலரை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.
- சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள இந்த லிங்கத்தை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் கிடைக்கும்.
- கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன.
இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது.
இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஒவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது.
அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது.
இந்த எட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது.
இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.
கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.
இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.
சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள இந்த லிங்கத்தை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் கிடைக்கும்.
கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்.
இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது.
இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும்.
அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது.
இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள்.
கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கமாகும். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம்.
இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது.
இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் என நம்பபடுகிறது.
கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம்.
இதன் திசை தென்கிழக்காகும்.
இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது.
இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.
கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம்.
இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான்.
இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது.
சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.
கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம்.
இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும்.
இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.
கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம்.
வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.
செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.
கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிருவப்பட்டது.
புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது.
இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.
- இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோவிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது.
- இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும்.
இங்கு உள்ள கோவிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னி வடிவதில் காட்சியளிக்கிறார்.
மேலும் இக்கோவில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோவில் என்று வரலாறு கூறுகிறது.
மற்றும் ஒரு சிவன் பக்தரான பல்லாலா இக்கோவிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார்.
இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது.
சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம்.
ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார்.
இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர்.
இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார்.
இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார்.
இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோவில் இல்லை.
இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோவிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது.
இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
ஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.
- ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
- ஓம் பேரின்பக் கடலே போன்றி!
முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.
ஓம் அகர முதல்வா போற்றி!
ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!
ஓம் ஆனை முகத்தோய் போற்றி!ஓம் ஆனை முகத்தோய் போற்றி!ஓம் ஆனை முகத்தோய் போற்றி!
ஓம் இந்திரன் இளம்பிறை போற்றி!
ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!
ஓம் உமையவள் மைந்தா போற்றி!
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!
ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!
ஓம் ஐங்கரனே போற்றி!
ஓம் ஒற்றைக் கொம்பனேபோற்றி!
ஓம் கற்பக களிறே போற்றி!
ஓம் பேழை வயிற்றோய் போற்றி!
ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!
ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!
ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 9 நாட்களுக்குரிய போற்றி பாடல்கள் வருமாறு:-
முதல் நாளுக்குரிய போற்றி
ஓம் பொன்னே போற்றி!
ஓம் மெய்ப்பொருளே போற்றி!
ஓம் போகமே போற்றி!
ஓம் ஞானச் சுடரே போற்றி!
ஓம் பேரின்பக் கடலே போன்றி!
ஓம் குமாரியே போற்றி!
ஓம் குற்றங்களைவாய் போற்றி!
ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!
ஓம் பேரருட்கடலே போற்றி!
ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!
ஓம் அருட்கடலே போற்றி!
ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!
ஓம் இருளகற்றுவாய் போற்றி
ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!
ஓம் ஈயும் தயாபரி போற்றி!
ஓம் மங்கள நாயகியே போற்றி!
-இப்படி அர்ச்சனை முடிக்கவும்.
இரண்டாவது நாள் போற்றி
ஓம் வளம் நல்குவாய் போற்றி
ஓம் நலந்தரும் நாயகி போற்றி
ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி
ஓம் அறத்தின் வடிவோய் போற்றி
ஓம் மின் ஒளி அம்மா போற்றி
ஓம் எரி சுடராய் நின்ற தேவி போற்றி
ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி
ஓம் எரம்பன் தாயானவளே போற்றி
ஓம் எங்களின் தெய்வமே போற்றி
ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனே போற்றி
ஓம் ஈரேழுலகில் இருப்பாய் போற்றி
ஓம் சூளா மணியே போற்றி
ஓம் சுந்தர வடிவே போற்றி
ஓம் ஞானத்தின் வடிவே போற்றி
ஓம் நட்புக்கரசியே போற்றி
ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி!
மூன்றாம் நாள் போற்றி
ஓம் அறிவினுக்கறிவேபோற்றி
ஓம் ஞானதீபமேபோற்றி
ஓம் அருமறைப் பொருளேபோற்றி
ஓம் ஆதிமூலமாய் நின்றவளேபோற்றி
ஓம் புகழ்தரும் புண்ணியளேபோற்றி
ஓம் நற்பாகின் சுவையே போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி
ஓம் பரமனின் சக்தியேபோற்றி
ஓம் பாபங்கள் களைவாய்போற்றி
ஓம் அன்பெனும் முகத்தவளேபோற்றி
ஓம் அகிலத்தின் காப்பேபோற்றி
ஓம் செம்மேனியளேபோற்றி
ஓம் செபத்தின் விளக்கமேபோற்றி
ஓம் தானியந் தருவாய் போற்றி
ஓம் கல்யாணியம்மையேபோற்றி
நான்காவது நாள் போற்றி
ஓம் கருணை வடிவேபோற்றி
ஓம் கற்பகத் தருவேபோற்றி
ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய்போற்றி
ஓம் ஊழ்விணை தீர்ப்பவளேபோற்றி
ஓம் கரும்பின் சுவையேபோற்றி
ஓம் கார்முகில் மழையேபோற்றி
ஓம் வீரத்திருமகளே போற்றி
ஓம் வெற்றிக்கு வித்திடுவாய்போற்றி
ஓம் பகைக்குப் பகையேபோற்றி
ஓம் ஆவேசத் திருவேபோற்றி
ஓம் தீமைக்குத் தீயேபோற்றி
ஓம் நல்லன வளர்ப்பாய்போற்றி
ஓம் நாரணன் தங்கையேபோற்றி
ஓம் அற்புதக் கோலமேபோற்றி
ஓம் ஆற்றலுள் அருளேபோற்றி
ஓம் புகழின் காரணியேபோற்றி
ஓம் காக்கும் கவசமேபோற்றி
ஓம் ரோகிணி தேவியேபோற்றி
ஐந்தாம் நாள் போற்றி
ஓம் வீரசக்தியே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் கபாலியே போற்றி
ஓம் தாளிசினியே போற்றி
ஓம் கவுரி தேவியே போற்றி
ஓம் உத்தமத் தாயே போற்றி
ஓம் தர்மம் காப்பவளே போற்றி
ஓம் உதிரத்தின் தலைவியே போற்றி
ஓம் மெய்ஞான விதியே போற்றி
ஓம் தாண்டவத் தாரகையே போற்றி
ஓம் போற்றுவோர் துணையே போற்றி
ஓம் பச்சைக் காளியே போற்றி
ஓம் பவள நிறத்தினாய் போற்றி
ஓம் ஆகாய ஒளியே போற்றி
ஓம் பூதங்கள் உடையோய் போற்றி
ஓம் காளிகாதேவி சக்தியே போற்றி
ஆறாம் நாள் போற்றி
ஓம் பொன்னரசியே போற்றி
ஓம் நவமணி நாயகியே போற்றி
ஓம் இன்னமுதாய் இருப்போய் போற்றி
ஓம் சிங்கார நாயகியே போற்றி
ஓம் செம்பொன் மேனியளே போற்றி
ஓம் மங்காத ஒளியவளே போற்றி
ஓம் சித்திகள் தருவாய் போற்றி
ஓம் திக்கெட்டும் பரவினோய் போற்றி
ஓம் சுத்த பரிபூரணியே போற்றி
ஓம் மகாமந்திர உருவே போற்றி
ஓம் மாமறையுள் பொருளே போற்றி
ஓம் ஆநந்த முதலே போற்றி
ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி
ஓம் செம்மேனியாய் மிளிர்வாய் போற்றி
ஓம் மாகேஸ்வரியே போற்றி
ஓம் மகா சண்டிகையே போற்றி
ஏழாம் நாள் போற்றி
ஓம் மெய்த் தவமே போற்றி
ஓம் மூலாதாரத்து ஒளியே போற்றி
ஓம் ஆதிமுதல் அம்பரமே போற்றி
ஓம் அகண்ட பரிபூரணியே போற்றி
ஓம் அகிலலோக நாயகி போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவாய் போற்றி
ஓம் அஞ்சலென்று அருள்வாய் போற்றி
ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய் போற்றி
ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரி போற்றி
ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி
ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி
ஓம் எழுவரில் ஒன்றானவளே போற்றி
ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி
ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் சாம்பவி மாதே போற்றி
எட்டாம் நாள் போற்றி
ஓம் வேத மெய்பொருளே போற்றி
ஓம் மேனிக் கருங்குயிலே போற்றி
ஓம் அண்டர் போற்றும் அருட் பொருளே போற்றி
ஓம் எண்திசை ஈஸ்வரியே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி
ஓம் மாயோனின் மனம் நிறைந்தவளே போற்றி
ஓம் தூய ஒளியாய் தெரிபவளே போற்றி
ஓம் சிங்க வாகினித் தேவியே போற்றி
ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவே போற்றி
ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய் போற்றி
ஓம் துன்பம் துடைக்கும் தூமணி போற்றி
ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய் போற்றி
ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தே போற்றி
ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமே போற்றி
ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய் போற்றி
ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி!!
ஒன்பதாம் நாள் போற்றி
ஓம் ஓங்காரத்துப் பொருளே போற்றி
ஓம் ஊனாகி நின்ற உத்தமியே போற்றி
ஓம் படைத்தோன் பாகம் பிரியாய் போற்றி
ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி
ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமே போற்றி
ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளே போற்றி
ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி
ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி
ஓம் ஆறாது தத்துவம் அருளினாய் போற்றி
ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமே போற்றி
ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய் போற்றி
ஓம் அகண்ட பூரணி அம்மா போற்றி
ஓம் உண்ணும் சிவயோக உத்தமியே போற்றி
ஓம் பண் மறைவேதப் பாசறையே போற்றி
ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவே போற்றி
ஓம் சாம்பவி சங்கரித் தேவியே
போற்றி! போற்றி!!
- சரஸ்வதி பூஜையின் போது `துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம’ என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று. பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம்.
- கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.
சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.
சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும், படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.
சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம்.
வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும்.
செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.
எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து சுக்லாம் பரதரம் விஷ்ணும் சச்இவர்ணம் சதுர்புஜம்! பிரசந்த் வதனம் தீயாயேத் சர்வ விக்நோப சாந்தயே' என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.
சரஸ்வதி பூஜையின் போது `துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம' என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று. பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம்.
கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.
பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம்.
சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம்.
நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.
- பிறமதவாதிகளுடன் வாதிட்டு வெல்வதற்காக குருபரர் தமிழ்நாட்டிலும், அதன்பிறகு பாரதநாட்டின் இதர பகுதிகளிலும் திக்குவிஜயம் செய்தார்.
- அப்போது காசிக்கும் சென்றார். சைவர்களின் முக்கிய தலமாகிய காசியில் தமிழர்களுக்கு என்று ஒன்றுமே இல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டது.
கலைமகளின் துதிகள் ஏராளமாகத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன.
கம்பனின் சரஸ்வதி அந்தாதியும், ஒட்டக்கூத்தரின் ஈட்டி எழுபதும் குமரகுருபரின் சகல கலா வல்லி மாலையும் மிகவும் ஆற்றல் வாய்ந்த துதிமாலைகள்.
நாமகளின் பேரருளுக்கு பெரிதும் பாத்திரமானவர் குமரகுருபரர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரர் பிறந்ததிலிருந்து பேசாமலேயே இருந்தவர் அவர்.
சிறு வயதில் அவருடைய பெற்றோர் அவரை திருச்செந்தூர் முருகனின் சன்னிதானத்தில் விட்டுவிட்டு சென்றனர். முருகனின் திருவருளால் அவர் கவிமாரியாக பொழிந்தார்.
முதற்பாட்டு முருகன் போல் பாடிய கந்தர் கலிவெண்பா.
அன்றிலிருந்து தான் அவருக்கு குமரகுருபரன் என்னும் பெயர் நன்கு விளங்கலாயிற்று.
திருச்செந்தூரிலிருந்து மதுரைக்கு வந்தார். அங்கு அவர் மீனாட்சியின் சன்னதியில் மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடினார்.
அதை மன்னர் திருமலை நாயக்கன் மடிமீது சிறு குழந்தை வடிவிலிருந்து அங்கயற்கண்ணி கேட்டுக்கொண்டிருந்தாள்.
அதில் தொடுக்கும் பழம்பாடல் தொடையின் பயனே என்னும் பாடலை பாடும் போது திருமலை நாயக்கரின் கழுத்தில் கிடந்த முத்துமாலையை கழற்றி, மீனாட்சி, குருபரனின் கழுத்தில் சூட்டினாள்.
பிறமதவாதிகளுடன் வாதிட்டு வெல்வதற்காக குருபரர் தமிழ்நாட்டிலும், அதன்பிறகு பாரதநாட்டின் இதர பகுதிகளிலும் திக்குவிஜயம் செய்தார்.
அப்போது காசிக்கும் சென்றார். சைவர்களின் முக்கிய தலமாகிய காசியில் தமிழர்களுக்கு என்று ஒன்றுமே இல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டது.
ஆகவே காசியில் ஒரு மடத்தை தோற்றுவிக்க நிச்சயித்தார்.
அவ்வமயம் இந்துஸ்தானத்தின் பேரரசராக ஷாஜகான் இருந்தார்.
அவருடைய பிரதிநிதியாக அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோ நவாப் பதவியில் அவுத் என்னும் ஊரில் இருந்து வந்தார்.
அவரை காண சென்றார் குருபரர்.
சித்தராகிய குருபரர் போகும் போதே சிங்கமொன்றின் மீது சவாரி செய்து சென்றார். நவாபு இந்துஸ்தானி மொழியில் பேசினார். ஆனால் அம்மொழி குருபரருக்கு தெரியாது.
ஆகவே சரஸ்வதியை தியானித்து சகல கலாவல்லி மாலை எனும் பாடலை பாடினார். நாமகளுடைய அருளால் குருபரருக்கு இந்துஸ்தானியில் பேசும் ஆற்றல் ஏற்பட்டது.
நவாபிடம் இந்துஸ்தானியில் சரளமாக உரையாடி தம் வேண்டுகோளை சமர்ப்பித்தார். மனமகிழ்வுற்ற நவாபு காசியில் மடம் கட்டிக்கொள்ள இனாமாக நிலம் வழங்கினார்.
அன்றிலிருந்து குமரகுருபரன் மடத்தை காசி மடம் என்றும், அவருடைய வழியில் வந்த மடாதிபதிகளை காசி வாசி என்றும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
ஆகவே, சரஸ்வதி படத்தை வைத்துக்கொண்டு அதன் அருகே விளக்கேற்றி வைத்து முன்னால் ஒரு வெண்ணிற துணியை விரித்து, அதன் மீது புத்தகங்கள், எழுது கருவிகள், தொழிலுக்குரிய சாதனங்கள் ஆகியவற்றை வைத்து சகல கலா வல்லி மாலையை படித்துப் பூஜை செய்யலாம்.






