search icon
என் மலர்tooltip icon

    Recap 2023

    2023 ரீவைண்ட்: இந்தியாவை உலுக்கிய உத்தரகாண்ட் சுரங்க விபத்து
    X

    2023 ரீவைண்ட்: இந்தியாவை உலுக்கிய உத்தரகாண்ட் சுரங்க விபத்து

    • இந்திய மக்களை பரபரப்பாக பேசவைத்த விபத்தாக உத்தரகாண்ட் சுரங்க விபத்து மாறிவிட்டது.
    • நவம்பர் 28-ம் தேதி இரவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்


    உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்க வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நவம்பர் 12-ம் தேதி தீபாவளி அன்று சுரங்கத்தின் பாறைகள் இடிந்து விழுந்தது. அங்கு பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர்.

    மீட்புப் பணிகளில் சிக்கல்


    மீட்புப் பணி தொடர்ந்து தடங்கல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தது. எலி வளை தொழிலாளர்கள் எனப்படும் குறுகிய சுரங்கங்களை உருவாக்கும் அனுபவம் வாய்ந்தவர்கள் இதில் இறக்கப்பட்டனர். இந்த முறையே வெற்றிக்கு வித்திட்டது.

    17 நாளுக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசித்த தொழிலாளர்கள்


    நவம்பர் 28-ம் தேதி இரவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து பகுதியில் முகாமிட்டிருந்த முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் அன்போடு நலம் விசாரித்தனர்.

    Next Story
    ×