என் மலர்
Recap 2023

2023 ரீவைண்ட்: பாராளுமன்றத்தில் நிறைவேறிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா
- பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
- மக்களவையில் செப்டம்பர் 20-ம் தேதியும், மாநிலங்களவையில் செப்டம்பர் 21-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்டு, மக்களவையில் செப்டம்பர் 20-ம் தேதியும், மாநிலங்களவையில் செப்டம்பர் 21-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 29 அன்று மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
இதனால் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Next Story






