என் மலர்
Recap 2023

2023 ரீவைண்ட்: தீயாக பரவிய வதந்தி: கூட்டம் கூட்டமாக வெளியேறிய வடமாநில தொழிலாளர்கள்
- கோவை, திருப்பூர் மாநிலங்களில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி.
- பீகார், ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் பிரச்சினை எதிரொலிக்க, குழு அமைத்து விசாரணை
கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகம் முழுவரும் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலைப் பார்த்து வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருமாநில தொழிலாளர்கள் மீது கடுமையாக தாக்கப்பட்டதாக வீடியோக்கள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின.
இதனால் பாதுகாப்பு அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலம் திரும்பினர். இது பாதுகாப்பு தொடர்பான பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் எதிரொலித்தது.
இதனால் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பாதுகாப்பு குறித்து உறுதியளித்தார்.
என்றபோதிலும் பீகார் அரசு இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தமிழகம் வந்து பீகார் மாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது அவர்கள் சந்தோசமாக இருக்கிறோம். எந்த அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவித்தனர். அதன்பின் இந்த விவாகரம் முடிவடைந்தது.
கடந்த 2012-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி கிளம்பியது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறினர். அதன்பின் தென்மாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தினர் சென்றனர்.






