search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இளைஞர் காங்கிரசார் ஜோதி ஏந்தி பேரணி
    X

    ராஜீவ் காந்தி ஜோதியை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜனிடம் காங்கிரஸ் தலைவர்கள் வழங்கிய காட்சி.

    இளைஞர் காங்கிரசார் ஜோதி ஏந்தி பேரணி

    • புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜனிடம் கொடுத்தனர்.
    • கார்த்திகேயன், முகிலன், வேல்முருகன், மனோஜ், அன்பரசன், பாலன், அஷ்ரப் அலி, கண்ணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு ஜோதி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.

    இந்த ஜோதியை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜனிடம் கொடுத்தனர்.

    ஜோதியை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு அண்ணாசாலை, காமராஜர் சாலை வழியாக ராஜீவ் காந்தி சிலைக்கு பாதயாத்திரையாக கொண்டு சென்றார். பின்னர் காங்கிரஸ் தலைவர்களுடன் ராஜீவ் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் வேல்முருகன், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தியாகராஜன், ராஜ்குமார், மாநில பொதுச் செயலாளர்கள் ரகுமான், தனுசு

    வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆறுமுகம், விநாயகம், வீரமுத்து, மோகன், கிருஷ்ணராஜ் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கோவலன், பெருமாள், குருமூர்த்தி, சையத், சத்யநாராயணன், சுந்தரம், பிரதீப், சித்திக், ராகுல், அய்யப்பன், கார்த்திகேயன், முகிலன், வேல்முருகன், மனோஜ், அன்பரசன், பாலன், அஷ்ரப் அலி, கண்ணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×