என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பணம் திருடிய வாலிபர் கைது
- புதுவை காமராஜர் சாலையில் கோவில் உண்டி யலை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சம்பவத்தன்று கோவிலில் பூஜை மற்றும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் கோவில் பரா மரிப்பாளர் வேல்முருகன் கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் சாலையில் கோவில் உண்டி யலை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுவை காமராஜர் சாலை எல்லையில் ராஜய்யர் தோட்டம் பகுதியில் முத்தலாயம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.
சம்பவத்தன்று கோவிலில் பூஜை மற்றும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் கோவில் பரா மரிப்பாளர் வேல்முருகன் கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
கோவிலில் பூஜை செய்ய வந்த போது உண்டியல் உடைத்துகாணிக்கை பணத்தை கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நிர்வாகி வேல்முருகன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார்வழக்கு பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டில் ஈடுபட்டது கருவடிக்குப்பத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






