என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
வனத்துறையில் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- புதுவை 2, காரைக்கால் 2 என மொத்தம் 4 ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
- இந்த தகவலை வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் வனம் மற்றும் வனவிலங்கு துறையின் புதுவை, காரைக்கால் மண்டல அலுவலகங்களில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் 6 மாதம் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
புதுவை 2, காரைக்கால் 2 என மொத்தம் 4 ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதில் அரசு அலுவலக ங்களில் கண்காணிப்பாளர், ஆலோசகர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற 65 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வரும் 31-ந் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி தெரிவித்துள்ளார்.
Next Story






