search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உலகத் தமிழ் மாநாடு -சிந்தனையாளர்கள் பேரவை கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உலகத் தமிழ் மாநாடு -சிந்தனையாளர்கள் பேரவை கோரிக்கை

    • புதுவை சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
    • கடந்த 29-ம் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை நடந்தது.

    புதுச்சேரி*

    புதுவை சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி அரசு சார்பில் உலகத்தமிழ் மாநாடு நடத் தப்படும் என கடந்த பட் ஜெட்டில் அறிவிக்கப்பட் டது. 6 மாதம் கழித்து, கலை பண்பாட்டு துறைமூலம், கடந்த 29-ம் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை நடந்தது.

    புதுச்சேரியின் இலக்கிய ஆளுமை உலகம் அறிந்து கொள்ள செய்யும் இந்த முன்னெடுப்பை வரவேற் கிறோம். புதுச்சேரியில் தலைசிறந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் இயக்கங்களை கூட்டத்திற்கு அழைக்கா மல் புறக்கணிப்பு செய்தது கண்டனத்திற்கு உரியது.

    உலகத் தமிழ் மாநாடு கலை பண்பாட்டு துறை சார்பில் அல்லாமல் புதி தாக தமிழ் வளர்ச்சி துறையை உருவாக்கி அதன் மூலம் நடத்தினால் உலகம் முழுதும் பாராட் டும். தமிழ் வளர்ச்சித் துறையை தொடங்கும் ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

    இதனை மறுக்கும் பட்சத்தில் சிந்தனை யாளர்கள்பேரவை போராட்டங்களை நடத்தும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×