search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிபிரியர்கள் மதுபாட்டில்களை வீசி செல்வதால் அச்சத்துடன் வேலை செய்யும் தொழிலாளர்கள்
    X

    கிருமாம்பாக்கம் ஏரியில் தொழிலாளர்கள் ஆகாயத்தாமரையை அகற்றம் காட்சி.

    குடிபிரியர்கள் மதுபாட்டில்களை வீசி செல்வதால் அச்சத்துடன் வேலை செய்யும் தொழிலாளர்கள்

    • பணியில் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் செய்து வருகின்றனர்.
    • ஆகாயத்தாமரைகள் சுழ்ந்து கொண்டு கழிவு நீரும் கலந்து வருவதால் இருப்பதால் கொசு தொல்லையால் அவதிப்பட்டும், நோய் வாய்ப்பட்டும் காணப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பெரிய ஏரியில் 100 நாள் வேலை செய்து நடந்து வருகிறது.

    இந்த பணியில் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் மது பாட்டில்கள், முள்புதர்கள் சிதைந்து காணப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் அவ்வப்போது காயமடைந்து வருகின்றனர்.

    இந்த ஏரியை கிருமாம்பாக்கம் கோவில் சார்பில் குத்தகை விடப்பட்டு அதிக விலைக்கு ஏலம் எடுத்து மீன் வியாபாரம் நடந்து வரும் இந்த ஏரியில் 100நாள் ஆட்களை கொண்டு ஆகாய தாமரை அகற்றுவது பலரையும் கேள்வி எழுப்ப செய்கிறது.

    100 நாள் வேலைக்கு பல வாய்க்கால்கள் குளங்கள் இருந்தும் அதனை கண்டறிந்து இன்று வரை தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. கிருமாம்பாக்கம் பகுதியில் சாவடி குளம் என்னும் குளம் ஊருக்கு மத்தியில் இருந்து வருகிறது.

    இந்த குளத்தில் ஆகாயத்தாமரைகள் சுழ்ந்து கொண்டு கழிவு நீரும் கலந்து வருவதால் இருப்பதால் கொசு தொல்லையால் அவதிப்பட்டும், நோய் வாய்ப்பட்டும் காணப்படுகின்றனர்.

    100 நாள் வேலையில் இயந்திரத்தைக் கொண்டு ஊரக தொழிலாளர்களை கொண்டு சாவடிகுளத்தை தூர்வார வேண்டும். மேலும் பல குளங்களை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருமாம்பாக்கம் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×