என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
- மணிகண்டன் சுயநினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் மணிகண்டன்(வயது32). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் தினமும் சம்பாதிக்கும் பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து செலவழித்து வந்தார்.
அதுபோல் சம்பவத்தன்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். ஆனால் சாப்பிடாமல் தூங்கி விட்டார். மறுநாள் காலையில் பார்த்த போது மணிகண்டன் சுயநினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை ஆட்டோவில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் மணிகண்டன் இறந்து போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது சகோதரி பார்வதி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






