search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • தேங்காய்திட்டில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சரவணன் புதுவை கிருஷ்ணாநகரில் பாலா என்பவரிடம் பித்தளை பாத்திரங்களுக்கு பாலிஷ் போடும் வேலை செய்து வந்தார்.

    புதுச்சேரி:

    தேங்காய்திட்டில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை தேங்காய்திட்டு புதுநகர் மருதம் வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது42). இவருக்கு கோமதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    சரவணன் புதுவை கிருஷ்ணாநகரில் பாலா என்பவரிடம் பித்தளை பாத்திரங்களுக்கு பாலிஷ் போடும் வேலை செய்து வந்தார். கோமதி கோவிந்த சாலையில் சம்சா கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் அதனை அவரது மனைவி கோமதி கண்டிக்கும் போது சரவணன் அடிக்கடி கண்டாக்டர் தோட்டத்தில் அவரது தாயார் வீட்டில் தங்கி விடுவது வழக்கம். இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக சரவணன் மனைவியிடம் கோபித்து கொண்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் கோமதி சம்சா கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் படுக்கை அறையில் கணவர் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி கோமதி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×