என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • திருக்கனூர் அருகே மகன் இறந்த விரக்தியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே மகன் இறந்த விரக்தியில்

    தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு பெரமன்னார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது45). விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென இறந்து போனார். மகன் மீது அதிக பாசம் கொண்டிருந்த குமார் மகன் இழப்பை தாங்காமல் மனவேதனையில் இருந்து வந்தார். அவருக்கு அவரது மனைவி சரசு ஆறுதல் கூறி வந்தார். ஆனாலும், குமார் மன விரக்தியில் சோகத்துடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி சரசு கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×