என் மலர்
புதுச்சேரி

மத்திய அரசு நிறுவனத்துடன் புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட காட்சி.
மத்திய அரசு நிறுவனத்துடன்புதுவை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
- புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி உள்ளது.
- தொழில்நுட்பப் பகுதிகளில் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் அதனை சார்ந்த கல்விப் படிப்புகளில் வேலை.
புதுச்சேரி:
மத்திய தகவல் பாதுகாப்புத் துறையின் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகமான எஸ்.இ.டி.எஸ்.சுடன் புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி உள்ளது.
புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பேராசிரியர் ரஜீஷ் பூடானி, எஸ்.இ.டி.எஸ். நிர்வாக இயக்குனர் சுப்ரமணியன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இயக்குநர் தரணிக்கரசு மற்றும் புல முதன்மையர் சுப்பிரமணியம் ராஜு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பாதுகாப்பிற்கான சமூகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சுப்ரமணியன், பிரேம் லக்ஷ்மன் தாஸ், நடராஜன், ரேஷ்மி -திருப்பதி மற்றும் புதுவை பல்கலைக்கழக புல முதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவ லர்கள், பணியாளர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு விஞ்ஞானிகள் மற்றும் புதுவை பல்கலைக்கழக ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே குவாண்டம் பாதுகாப்பு உள்ளிட்ட தகவல் பாதுகாப்பின் வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பப் பகுதிகளில் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் அதனை சார்ந்த கல்விப் படிப்புகளில் வேலை.
திறன் மேம்பாடு, ஆலோசனை சேவைகள், கார்ப்பரேட் பயிற்சியை அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற பொது அல்லது தனியார் துறை நிறுவனங்களுக்கு தகவல் பாதுகாப்புத் துறைகளில் வழங்குவதில் இணைந்து பணியாற்றுவது. கூட்டு நிகழ்வுகள், பட்டறைகள், பயிற்சி திட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை செயல்படுத்தும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் பேராசிரியர் சித்ரலேகா ஒருங்கிணைத்தார். புதுவை பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைத் தலைவர் சத்யா நன்றி கூறினார்.






