என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    50 சதவீத அரசு இடங்களை பெறாதது ஏன்.?-அ.தி.மு.க. கேள்வி
    X

    கோப்பு படம்.

    50 சதவீத அரசு இடங்களை பெறாதது ஏன்.?-அ.தி.மு.க. கேள்வி

    • அரசு ஒதுக்கீட்டை பெறாதது ஏன்.? என்ற குற்றச்சாட்டுக்கு கவர்னர் பதிலளிக்க வேண்டும்.
    • கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் தன்னுடைய மேலதிகாரி உத்தரவுபடி தான் அனுமதி கொடுத்ததாக கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோரின் பொறுப்பற்ற தன்மையாலேயே அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, கவர்னர் அறிவித்தபடி தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை அனுமதி பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும், செல்வகணபதி எம்.பிக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தமுள்ள 650 இடங்களில் சட்டப்படி 50 சதவீதமான 325 இடங்களை அரசு ஒதுக்கீடாக அறிவித்திருக்க வேண்டும்.

    ஆனால் தற்போது 36.4 சதவீதம் மட்டுமே பெறப்பட்டு 239 இடங்கள் அரசு ஒதுக்கீடாக அறிவிக்கப் பட்டுள்ளது.

    தனியார் மருத்துவ கல்லூரியில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டை பெறாதது ஏன்.? என்ற குற்றச்சாட்டுக்கு கவர்னர் பதிலளிக்க வேண்டும்.

    கோவில் நிலம் அபகரிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் தன்னுடைய மேலதிகாரி உத்தரவுபடி தான் அனுமதி கொடுத்ததாக கூறியுள்ளார்.

    எனவே அந்த மேல் அதிகாரிகள் யார்? அவர் மீது நடவடிக்கை எடுக்காது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×