என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்களுக்கு முட்டை வழங்குவது எப்போது?-  எதிர்கட்சித்தலைவர் சிவா கேள்வி
    X

    கோப்பு படம்.

    மாணவர்களுக்கு முட்டை வழங்குவது எப்போது?- எதிர்கட்சித்தலைவர் சிவா கேள்வி

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 2 முட்டைகள் சத்துணவுடன் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
    • பள்ளி திறந்து 3 மாதமாகியும் மாணவர்களுக்கு இதுவரை முட்டை வழங்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கி வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 2 முட்டைகள் சத்துணவுடன் வழங்கப்பட்டு வருவது வழக்கம். ஆனால் பள்ளி திறந்து 3 மாதமாகியும் மாணவர்களுக்கு இதுவரை முட்டை வழங்கவில்லை.

    முட்டை கொள்முதல் பெற இ டெண்டர் முறை கொண்டு வரப்பட்டதால், 12 ஆண்டுகளாக ஒப்பந்தம் பெற்றவர்கள் இ டெண்டரில் கலந்து கொள்ள முடியாமல் போனது. முட்டை இதுவரை கொள்முதல் செய்யவில்லை. இதனால் புதுவையில் 53 ஆயிரம், காரைக்காலில் 28 ஆயிரம், மாகியில் 3 ஆயிரத்து 500, ஏனாமில் 4 ஆயிரத்து 500 மாணவர்கள் உட்பட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 89 ஆயிரம் ஏழை, எளிய மாணவர்கள் முட்டை–யில்லாமல் மதிய உணவு பெற்று வருகின்றனர்.

    எனவே இடெண்டர் முறையை தவிர்த்து பழைய நிலையில் நடைமுறையில் இருந்த லிமிடெட் டெண்டர் முறையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் முட்டை கொள்முதல் செய்து ஏழை, எளிய மாணவர்களுக்கு முட்டை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், முட்டை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதில் உள்ள சி க்கலை தீர்த்து மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×