search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-எதிர்கட்சி தலைவர் சிவா வழங்கினார்
    X

    முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் உருவ படத்திற்கு தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏக்கள், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

    ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-எதிர்கட்சி தலைவர் சிவா வழங்கினார்

    தி.மு.க., பல்வேறு அணி நிர்வாகிகள், மாநில, தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ராமநாதனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் எம்.பியுமான ராதாக்கிருஷ்ணன், பாகூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆகியோரின் தந்தையான முன்னாள்

    எம்.எல்.ஏ. ராமநாதன் மறைவையொட்டி, 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாகூர் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது.

    பாகூர் மாதாக்கோவில் சந்திப்பு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். புதுவை சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. மாநில அமை ப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில், அவைத்தலைவர் எஸ்.பி., சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத் ஆகியோர் ராமநாதன் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் மாநில நிர்வாகிகள் பாஸ்கர், தவமுருகன், சிவபிரகாசம், தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன், அவைத் தலைவர் மூர்த்தி, பொருளாளர் பாவாடை, பிரதிநிதி பிரகாசம், துணை செயலாளர் சத்தியா, ராம்குமார், முத்துகண்ணு, கோபாலக்கிருஷ்ணன், தி.மு.க., பல்வேறு அணி நிர்வாகிகள், மாநில, தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ராமநாதனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், தென்னை மரக்கன்றுகள், அன்னதானம் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்தராமன், காங்., நிர்வாகிகள் மணவாளன், கோபு, கோவிந்தன், திராவிட கழகம் நிர்வாகிகள் தாமோதரன், சேகர், இந்திய கம்யூ., தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மா.கம்யூ., சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சி அருளொலி, மணப்பட்டு வக்கீல் சுப்ரமணி, மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, பாகூர் பகுதியை சேர்ந்த தி.மு.க., மாநில பொறுப்பா ளர்கள்,நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×