search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
    X

    செட்டிபட்டு கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்து பாட்கோ மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் டிராக்டரை இயக்கி வழங்கினார். அருகில் அ.தி.மு.க. நிர்வாகி சுத்துகேணி பாஸ்கர் உள்ளார்.

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்

    • மண்ணாடிப்பட்டு தொகுதி பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்கனூரில் நடந்தது.
    • அமைச்சர் நமச்சிவாயம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு சிகப்பு ரேஷன்கார்டு, கல்வீடு கட்ட மானியத்தொகையை வழங்கினார்.

    புதுச்சேரி

    மண்ணாடிப்பட்டு தொகுதி பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்கனூரில் நடந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு சிகப்பு ரேஷன்கார்டு, கல்வீடு கட்ட மானியத்தொகையை வழங்கினார். சமூகநலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையையும் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், முத்தழகன், பா.ஜனதா நிர்வாகிகள் தமிழ்மணி, சிவா, கலியபெருமாள், செல்வகுமார், கண்ணன், அ.தி.மு.க. நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் செட்டிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். பாட்கோ மூலம் ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் உழவுப்பணிக்காக வாங்கப்பட்ட டிராக்டரை ஓட்டிய அமைச்சர் அதனை விவசாயிகளின் பயன் பாட்டுக்கு ஒப்படைத்தார்.

    Next Story
    ×