என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பெண் நீதிபதிகள் அதிகமாக வேண்டும்-கவர்னர் தமிழிசை விருப்பம்
- புதுவை அரசு சட்டக்கல்லூரியின் பொன்விழா கொண்டாட்ட நிறைவு விழா நடந்தது.
- நாடு முழுவதும் 18 லட்சம் வக்கீல்களில் 15 சதவீதம் மட்டுமே பெண் வக்கீல்கள் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு சட்டக்கல்லூரியின் பொன்விழா கொண்டாட்ட நிறைவு விழா நடந்தது.
விழாவில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:- நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வக்கீல்களின் பங்கு இன்றியமையாதது. நாடு முழுவதும் 18 லட்சம் வக்கீல்களில் 15 சதவீதம் மட்டுமே பெண் வக்கீல்கள் உள்ளனர்.
நீதிபதிகளிலும் பெண்கள் குறைவாகவே உள்ளனர். இளம்பெண்கள் நீதித்துறையில் பணியாற்ற முன்வர வேண்டும். ஏனெனில் ஒரு சமூகத்தில் பெண்களின் நிலையை வைத்துத்தான் அளவீடு செய்ய முடியும் என அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.
எனவே நீதித்துறையில் அதிகளவு பெண்கள் வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கவர்னர் மாளிகையில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி உதய்உமேஷ்லலித் தலைமையில் நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், சுந்தரேஷ், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ராஜா ஆகியோர் கவர்னர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.