search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோவில் பிரசாதம் வழங்கி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வாழ்த்து
    X

    புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் பிரசாதம் வழங்கப்பட்ட காட்சி.

    கோவில் பிரசாதம் வழங்கி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வாழ்த்து

    • அரச முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
    • மாவட்ட நகர, ஒன்றிய, பகுதி, கிளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    புதுச்சேரி:

    தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில், அரச முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

    அதனை தொடர்ந்து கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு, மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் தலைமையில் புதுச்சேரி மாநில செய லாளர் சரவணன் முன்னி லையில் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கடலூர் கிழக்கு மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் மற்றும் சிதம்பரம் நகர நிர்வாகிகள் சந்தித்து சிறப்பு பூஜையின் பிரசாதம் வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் அருண்ராஜ், சிதம்பரம் நகர தலைவர் கென்னடி, மாவட்ட தொண்டரணி செயலாளர் விஜய்குரு, நகர செயலாளர் விவேக், மாவட்ட தொண்டரணி பொருளாளர் விக்னேஷ், மாவட்ட தொண்டரணி துணை தலைவர் பிரித்திவிராஜ் மாவட்ட தொண்டரணி இணை செயலாளர்கள் மணிகண்டபிரபு, பாண்டியன், நகர மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் விக்னேஷ், நகர தொண்டரணி தலைவர் அமர், நகர தொண்டரணி செயலாளர் குணா, நகர துணை அமைப்பாளர் சின்னமணி மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட நகர, ஒன்றிய, பகுதி, கிளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    Next Story
    ×