என் மலர்
புதுச்சேரி

வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம் நடந்த காட்சி.
வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்வ விழா
- வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்வ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இக்கோவிலின் 36-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா திருமஞ்சனத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவை காந்தி வீதியில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் 36-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா திருமஞ்சனத்துடன் தொடங்கியது.
விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கொடியேற்றம் நடந்தது. 7 மணிக்கு ஹம்சவாகன புறப்பாடு நடக்கிறது.
(செவ்வாய்க்கிழமை) சூர்யபிரபை 10.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7.30 மணிக்கு தங்க சிம்ம வாகன புறப்பாடு நடக்கிறது. 8-ந் தேதி யாளி வாகனம், 10 மணிக்கு திருமஞ்சனம், 7.30 மணிக்கு ஹனுமந்த வாகன புறப்பாடு நடக்கிறது.
9-ந் தேதி பல்லக்கு ஸ்ரீவேணுகோபாலர் திருக்கோலம், 10 மணிக்கு திருமஞ்சனம், 7.30 மணிக்கு சேஷவாகன புறப்பாடு நடக்கிறது. 10-ந் தேதி பல்லக்கு மோகன அவதாரம், இரவு தங்க கருட சேவை நடக்கிறது. 11-ந் தேதி பல்லக்கு, இரவு தங்க யானை வாகனம், 12-ந் தேதி மாலை 4 மணிக்கு சூர்ணோத்சவம், இரவு இந்திரவிமானம் புறப்பாடு நடக்கிறது.
13-ந் தேதி வெண்ணெய்தாழி திருக்கோலம், இரவு குதிரை வாகனம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 15-ந் தேதி 108 கலச திருமஞ்சனம், மாலை சந்திரபிரபை, வீதி புறப்பாடு நடக்கிறது.
16-ந் தேதி தெப்போ ற்சவம், 17-ந் தேதி முத்துவிமானம், 18-ந் தேதி புஷ்பபிரபை, 19-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 20-ந் தேதி பானகபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலர் வாரியத்தினர் பக்தர்கள் சபையினர் செய்து வருகின்றனர்.






