search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுமக்களுடன் மத்திய மந்திரி கலந்துரையாடல்
    X

    மத்திய மந்திரி எல்.முருகனை இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி. 

    பொதுமக்களுடன் மத்திய மந்திரி கலந்துரையாடல்

    • மத்திய மந்திரி எல்.முருகன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
    • இலவச எரிவாயு திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளிலும் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    மத்திய மந்திரி எல்.முருகன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், சிவசங்கரன், வி.பி.ராமலிங்கம், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், பொதுச்செயலாளர் சக்தி கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசும் போது பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட தூய்மை பாரத திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

    இலவச எரிவாயு திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளிலும் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரி யின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் புதுவையில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து புதுவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வணிகர்களை சந்தித்து மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.

    Next Story
    ×