என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஆம்னி பஸ்களில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை
- 4 பஸ்களுக்கு அபராதம் விதிப்பு
- நீண்ட தூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்தது.
புதுச்சேரி:
ஆயுத பூஜை பண்டிகை யொட்டி இன்று 21-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 4 தினங்கள் விடுமுறை நாட்களாக உள்ளது.
இந்த விடுமுறையை பயன்படுத்தி பலரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில், பஸ், ஆம்னி பஸ் களில் செல்கின்றனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில் மற்றும் பஸ்களில் டிக்கெட் கிடைக்கவில்லை.
இதனால் நீண்ட தூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்தது.
அதையடுத்து தமிழக அரசு ஒவ்வொரு ஊருக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ஆணையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் புதுவையை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டி டோல்கேட்டில் திண்டிவனம் சரக்கு போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமை யிலான போக்குவரத்து துறை அலுவலர்கள் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி பரிசோதனையில் ஈடுபட்டனர்.
இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4 ஆம்னி பஸ்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்