என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொது இடத்தில் ரகளை செய்த 6 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    பொது இடத்தில் ரகளை செய்த 6 பேர் கைது

    • பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தனர்.
    • கடலூர் பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவரை பாகூர் போலீசாரும் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் போலீசார் நேற்று மாலை டி.என்.பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மைதானத்தில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த நிதீஷ்(19) மற்றும் வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத்(25) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    இதுபோல் புதுவை 100 ரோட்டில் தனியார் மதுபான கடை அருகே குடித்து விட்டு ரகளை செய்த வில்லியனூர் கோபாலன் கடை அம்மா நகரை சேர்ந்த அலெக்ஸ்(43), சாரம் பாலாஜி நகரை சேர்ந்த விஜயகுமார்(44) ஆகிய 2 பேரையும் உருளையன்பேட்டை போலீசாரும், கன்னியகோவில் பகுதியில் பொது இடத்தில் ரகளை செய்த கடலூர் சொத்திக்குப்பத்தை சேர்ந்த ஆகாஷ்(22) என்பவரை கிருமாம்பாக்கம் போலீசார், பாகூர் கொமந்தான்மேடு பகுதியில் ரகளை செய்த கடலூர் பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவரை பாகூர் போலீசாரும் கைது செய்தனர்.

    Next Story
    ×