என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
மது குடித்த சுற்றுலா பயணி பரிதாப சாவு
- புதுவை தனியார் விடுதியில் தங்கி அளவுக்கு அதிகமாக மது குடித்த சுற்றுலா பயணி பரிதாபமாக இறந்து போனார்.
- ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேர்த்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து
புதுச்சேரி:
புதுவை தனியார் விடுதியில் தங்கி அளவுக்கு அதிகமாக மது குடித்த சுற்றுலா பயணி பரிதாபமாக இறந்து போனார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேர்த்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த இவரது அண்ணன் மகன் இளங்கோ(வயது29) மற்றும் 5 பேருடன் புதுவைக்கு சுற்றுலா வந்தனர்.
இவர்கள் புதுவை அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி புதுவையில் சுற்றுலா தலங்களில் பார்வையிட்டு வந்தனர். இவர்கள் புதுவை கடற்கரை சென்று கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர்.
பின்னர் விடுதி அறையில் அனைவரும் மது குடித்தனர். அப்போது இளங்கோ அளவுக்கு அதிகமாக மது குடித்தார். பின்னர் அனைவரும் விடுதியில் தூங்கினர். இரவு 7 மணியளவில் இளங்கோ வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளி வாந்தி எடுத்தப்படி குப்புற படுத்து கிடந்தார்.
அவரை நண்பர்கள் எழுப்பிய போது இளங்கோ பேச்சுமூச்சியின்றி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இளங்கோ அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது நண்பர்கள் பெரியக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டிவனம் எரையா னூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவக்குமார்(56). இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கமுள்ள சிவக்குமார் குடி பழக்கத்துக்கு அடிமையாகி மது குடிக்க அடிக்கடி புதுவைக்கு வருவது வழக்கம்.
அதுபோல் இவர் மது குடிப்பதற்காக பஸ்சில் புதுவைக்கு வந்தார். பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு மதுக்கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த சிவக்குமார் மது கடை அருகே உள்ள ஒரு விடுதி வாசலில் மயங்கி கிடந்தார்.
இதுபற்றி விடுதி ஊழியர் செல்போன் மூலம் சிவக்குமாரின் மகன் பிரவீன் குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பிரவீன்குமார் வந்து பார்த்த போது அங்கு அவரது தந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சிவக்குமார் இறந்து போனது தெரிய வந்தது.
இதுகுறித்து அவரது மகன் பிரவீன்குமார் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






