என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
![மதகடிப்பட்டில் போக்குவரத்து நெரிசல் மதகடிப்பட்டில் போக்குவரத்து நெரிசல்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/14/1836099-road.webp)
பாலத்தில் உட்பகுதியில் தள்ளுவண்டி கடைகள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி.
மதகடிப்பட்டில் போக்குவரத்து நெரிசல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த பாலத்தின் உட்புறத்தில் 2 பக்கங்களிலும் இரு சக்கர வாகனங்கள் தள்ளுவண்டிகள் சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் புதுவையில் இருந்து திருக்கனூர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் தற்பொழுது சென்று வருகிறது.
இந்த பாலத்தின் உட்புறத்தில் 2 பக்கங்களிலும் இரு சக்கர வாகனங்கள் தள்ளுவண்டிகள் சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர்களிலிருந்து வரும் பஸ்கள் இந்த மேம்பாலத்தின் உட்பகுதியிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு ஏற்றியும் செல்கின்றனர்.
இதனால் மிகுந்த வாகன நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறுவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு அதிக அளவில் பஸ்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருக்கின்றன.
பெரும்பாலும் மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை அதிக அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தே செல்கின்றன. இது குறித்து பொதுமக்கள் வில்லியனூர் போக்குவரத்து போலீசாரி டமும் திருபுவனை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில நேரங்களில் ஒரு சில போலீசார் மட்டுமே நீண்ட நேரத்திற்கு பிறகு அப்பகுதிக்கு வருகின்றனர்.
அவர்களால் உடனடியாக போக்குவரத்தை சரி செய்ய முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அதிக அளவில் மாலை நேரங்களில் போலீசாரை நியமித்து பாலத்தில் உட்பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் வாகனங்களை அப்புற ப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)