என் மலர்
புதுச்சேரி

திருக்காஞ்சி புஷ்கர விழா ‘லோகோ’ முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட காட்சி.
திருக்காஞ்சி புஷ்கர விழா 'லோகோ'-முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்
- வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் சங்கராபரணி நதிக்கரையோரம் பிரசித்தி பெற்ற காமாட்சி மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
- பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் சங்கராபரணி நதிக்கரையோரம் பிரசித்தி பெற்ற காமாட்சி மீனாட்சி உடனுறை
ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு சங்கராபரணி மேஷ குரு ஆதி புஷ்கரணி விழா அடுத்த மாதம் 22-ந் தேதி தொடங்கி, மே மாதம் 3-ந்தே தி வரை நடக்கிறது.
இந்த விழா குறித்து பொதுமக்கள், பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புஷ்கரணி விழாவுக்கான
'லோகோ'-வை முதல்-அமை ச்சர் ரங்கசாமி சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், நாக.தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story






