search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காதலிக்க வலியுறுத்தி இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்
    X

    கோப்பு படம்.

    காதலிக்க வலியுறுத்தி இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

    • வாலிபர் கைது
    • திலாசுப் பேட்டையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணிடம் அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் தட்டாஞ்சாவடியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்துள்ளார். அப்போது திலாசுப் பேட்டையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணிடம் அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்தார்.

    இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் முறையிட்டார். அவர்களும் சிவக்குமாரை அழைத்து கண்டித்தனர்.

    இதற்கிடையே அந்த பெண் பெட்ரோல் நிலைய வேலையில் இருந்து நின்றுவிட்டார். இதனை தொடர்ந்து அந்த பெண் காய்கறி கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

    இதனை அறிந்து கொண்ட சிவக்குமார் 4 நாட்களுக்கு முன்பு காய்கறி கடை முன்பு நின்றுக்கொண்டு சைகை காட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் மீண்டும் முறையிட்டார். திருமணம் நிச்சயிக்கப்ப ட்டுள்ளதால் சிவக்குமாரிடம் எந்த பிரச்சி னையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என பெற்றோ ர்கள் கேட்டுக்கொண்டனர்.

    இந்நிலையில், மது போதையில் காய்கறி கடைக்குள் நுழைந்த சிவக்குமார் என்னை தவிர வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால், உன்னையும், உன்னை திருமணம் செய்து கொள்பவனையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி விட்டு சென்றார்.

    இதனால் பயந்து போன அந்த பெண் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×