என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கட்ட பஞ்சாயத்து செய்வோரை சட்டசபைக்குள் அனுமதிக்க கூடாது
- சபாநாயகரிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
- கட்ட பஞ்சாயத்து, மிரட்டல், நில அபகரிப்பு போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனு வில் கூறியிருப்பதாவது:-
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அலுவல கத்துக்கு தினந்தோறும் சிலர் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்களை முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் போல வெளியில் காட்டிக்கொள்கின்றனர்.
அதன்மூலம் கட்ட பஞ்சாயத்து, மிரட்டல், நில அபகரிப்பு போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொதுமக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
எனவே இத்தகைய நபர்களை இனம்கண்டு அவர்களை சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்க க்கூடாது இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
புதுவை சட்டசபையில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் புரோ க்கர்கள் இருப்பதாகவும், கட்ட பஞ்சாயத்து நடைபெறுவதாகவும் ஏற்கனவே முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி யிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்