search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பல்வேறு கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
    X

    பல்வேறு கட்சியினர் அக்கட்சிகளிலில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த போது எடுத்த படம்.

    பல்வேறு கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்

    • மாநில துணை தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாள ருமான தேவதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • ஜெரால்டு, ராஜ்மோகன், சண்முகம், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியோர் இணைந்தனர்.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவல கத்தில் நடந்த இணைப்பு விழாவிற்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாள ருமான தேவதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    வக்கீல் பிரிவின் தலைவர் மருது பாண்டியன் முன்னிலை யில் ராஜ் பவன் தொகுதியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி சித்தானந்தம் தலைமையில் காங்கிரசில் இணைந்தனர். காமராஜர் நகரை சேர்ந்த தொழிலதிபர் பரந்தாமன் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

    விழாவில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, மாநில காங்கிரஸ் பொதுச்செ யலாளர் திருமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாபுலால்,வக்கீல்கள் ராமலிங்கம், கோவிந்தராசு, மாவட்டத் தலைவர் வேல்முருகன் வட்டாரத் தலைவர்கள் ராஜா, ஜெரால்டு, ராஜ்மோகன், சண்முகம், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×