என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி

டிரான்ஸ்பார்மரில் பல லட்சம் காப்பர் வயர் திருட்டு
டிரான்ஸ்பார்மரில் பல லட்சம் காப்பர் வயர் திருட்டு

- பல லட்சம் மதிப்பிலான காப்பர் வயர், ட்ரான்ஸ்பார்மர் ஆயில் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமப் பகுதிகளில் தொடர் மின்வெட்டு, குறைந்த அழுத்த மின்சாரம் வந்த நிலையில் அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமாரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் புதுவை மின்துறை சார்பில் அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணி முழுவதும் முடிந்த நிலையில் மின்சார வயரை மட்டும் இணைக்கும் பணி மட்டும் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் அந்த புதிய டிரான்ஸ் பார்மரில் மர்ம நபர்கள் பல லட்சம் மதிப்பிலான காப்பர் வயர், ட்ரான்ஸ்பார்மர் ஆயில் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து மின்துறை இளநிலை பொறியாளர் செல்வராஜ் ரூ.3.65 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருட்டுபோனதாக வில்லியனூர் போலீசில் புகார்செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
