என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
- பின்னர் வந்து பார்த்த போதுமோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை சேதராப்பட்டு குமரன் நகரை சேர்ந்தவர் சங்கர்ராஜ் (வயது 25) இவர் தனியார் தனியார் டிராவல்சில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று மதியம் இவர் வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். பின்னர் வந்து பார்த்த போதுமோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சங்கர் ராஜ் சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






