என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மது குடிக்க வேலைபார்த்த இடத்தில் திருடியவர் கைது
- திருபுவனை அருகே உள்ள திருவண்டார் கோவில் தொழிற்பேட்டையில் உள்ள ஹைட்ராலிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
- வரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பர் எந்திர உதிரி பாகங்களை போலீசார் கைப்பற்றினர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே உள்ள திருவண்டார் கோவில் தொழிற்பேட்டையில் உள்ள ஹைட்ராலிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இங்கு எந்திரத்துக்கு பயன்படும் ரூ.1 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்கள் திருடு போயிருந்தன. தொழிற்சாலையின் மனித வள அதிகாரி ஜீவபாலன் திருபுவனை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.
புகாரினை விசாரித்த உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருடு போன தொழிற்சாலைக்கு நேரில் சென்று அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
ஒப்பந்த தொழிலாளராக பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும் பாக்கம், திருப்புகழ் தெருவை சேர்ந்த சாமுவேல் ராஜ் (வயது 33) என்பவர் காப்பர் பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்த னர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பர் எந்திர உதிரி பாகங்களை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில், குடி பழக்கம் கொண்ட அவர், தொழிற் சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறார். வாங்கும் சம்பளத்தில் குடும்பம் நடத்தவே சிரமப்படும் அவருக்கு குடி பழக்கத்தை விட முடியவில்லை. அதனால் சிறிய அளவில் திருடி குடித்து வந்துள்ளார்.
தற்போது ரூ.ஒரு லட்சம் அளவுக்கு திருடும் போது சி.சி.டி.வி.யால் சிக்கியது தெரியவந்தது. குடி பழக்கத்தால் தற்போது வேலையும் பறி போனது.






