search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சர்வீஸ் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்
    X

    நெடுஞ் சாலை பணி தற்போது நடை பெற்று வரும் காட்சி.

    சர்வீஸ் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • தற்போது மதகடிப்பட்டிலிருந்து திருக்கனூர் செல்லும் சாலை முற்றிலுமாக அடைக்கப்பட்டு சர்வீஸ் சாலை போடும்பணி நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- நாகப் பட்டினம் தேசிய நெடுஞ் சாலை பணி தற்போது நடை பெற்று வருகிறது. இதற்காக மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படுகிறது.

    இந்த மேம்பாலத்தில் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை போடப்பட்டு வரும் நிலையில் தற்போது மதகடிப்பட்டிலிருந்து திருக்கனூர் செல்லும் சாலை முற்றிலுமாக அடைக்கப்பட்டு சர்வீஸ் சாலை போடும்பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு வழியாக திருக்கனூர் செல்லும் அனைத்து வாக னங்களும் மேம்பாலத்தின் மேல் சென்று அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி வழியாக அனைத்து வாக னங்களும் திருப்பி விடப் பட்டுள்ளன.

    இதனால் 2 சக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் தொலை தூரம் சென்று வரவேண்டிய சூழல் உள்ளது.

    எனவே போர்க்கால அடிப்படையில் சர்வீஸ் சாலை பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×