என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்
- முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்
- தேசியக்கொடியை கவுரவிக்கும் வகையில் தேசம் போற்றுவோம், வீடு தோறும் தேசியக்கொடியை ஏற்றுவோம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் நாட்டின் அடையாளமாக விளங்கும் தேசியக்கொடியை கவுரவிக்கும் வகையில் தேசம் போற்றுவோம், வீடு தோறும் தேசியக்கொடியை ஏற்றுவோம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. வருகிற சுதந்திர தினத்தை யொட்டி மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் நாளை 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசியக் கொடியை பொதுமக்கள் ஏற்ற வேண்டும்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் டுவிட்டர் உட்பட சமூக வலைதளங்கள் வாயிலாக வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






