என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
அரசு ஆய்வு செய்து குறைகளை களைய வேண்டும்
- வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
- மருத்துவ மாணவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இங்கு மாணவர்க ளுக்கு தேவையான தங்கும் இடம், ஆய்வகங்கள், நூலகம், பரிசோதனைக் கூடம் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா? என்பதை பல்கலைக்கழக நிர்வாகமும் அரசும் ஆய்வு செய்வதே இல்லை.
புதுவை பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 4 மருத்துவக்கல்லூரிகளில் 600 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள் தோல்வி பயம் காரணமாக 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வை எழுத வில்லை. தேர்வு எழுதிய 500 மாணவர்களிலும் 250-க்கும் மேற்பட்ட மாண வர்கள் செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.
மருத்துவ கல்வியை முழுமையாக மாணவர்க ளால் கற்க முடியாமல் போவதற்கு யார் காரணம்? சுயலாப நோக்கத்தால், தனியார் மருத்துவக்கல்லூரிகளின் அத்துமீறல்கள், கவன குறைவுகளை புதுவை பல்கலைக்கழகமும், அரசும் கண்டுகொள்வதில்லை.
இதுவே மாணவர்களின் தேர்வுபயம், தோல்விக்கு காரணம். புதுவை அரசும், பல்கலைக்கழகமும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்து மாணவர்க ளின் குறைகளை கேட்ட றிந்து களைய வேண்டும். மருத்துவ மாணவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்