search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முன்னாள் ராணுவ வீரர்கள்  சங்கத்தின் வங்கி கணக்கை அரசு முடக்கி வைக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை அரசு முடக்கி வைக்க வேண்டும்

    • முன்னாள் தலைவர் வலியுறுத்தல்
    • சங்கத்தில் பல்வேறு பிரச்சினை இருக்கும் வரை சங்க அலுவலகத்தை திறக்க கூடாது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் வீரர்கள் லீக் சங்கத்தின் முன்னாள் தலைவர் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பொருளாளர் இல்லாம லேயே நடத்தப்பட்டுள்ளது. வருடாந்திர சங்க கணக்கை பொதுச்செயலாளரை கொண்டு வாசித்துள்ளனர்.

    சங்கத்தில் பல்வேறு பிரச்சினை இருக்கும் வரை சங்க அலுவலகத்தை திறக்க கூடாது. சங்கத்தின் வங்கி கணக்கை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் வரை அரசு முடக்கி வைக்க வேண்டும்.

    ெடல்லி தலைமை சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ள படி தற்போது புதுவை சங்க தலைவர் மீதான விசாரணை முடிந்த பின்னரே சங்கத்து க்கு தேர்தல் முறையாக நடைபெற்று புதிய நிர்வா கிகள் தேர்தெடு க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×