என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண் மயங்கி விழுந்து சாவு
    X

    கோப்பு படம்

    பெண் மயங்கி விழுந்து சாவு

    • ஜீவிதாவிற்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.
    • கடந்த ஒரு வாரமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்

    புதுச்சேரி:

    புதுவை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜீவிதா (வயது 37). இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. ஜீவிதாவின் தங்கையின் கணவர் விபத்தில் இறந்தார். இதனால் குடும்பமே சோகத்தில் இருந்துள்ளது.

    இந்த நிலையில் ஜீவிதாவிற்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜீவிதா நேற்று காலை வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் வீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜீவிதா இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஜீவிதாவின் தந்தை கணேசன் கொடுத்த புகார் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×